Wednesday, March 10, 2021

சென்னை புத்தகக் காட்சியும் எஸ்.ரா.வும்

44ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது.  

இந்த ஆண்டு புத்தகக் காட்சி தொடர்பாக  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளைக் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன்.  

இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள் என பல நேரலை கட்டுரைகளால் நிகழ்ச்சியை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார் எஸ்.ரா..

தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களை நேரடியாக சந்திக்கும்  அவர் தனது அன்றாட அனுபவங்களை மட்டும் எழுதாமல் புதிய புதிய புத்தக அறிமுகங்கள், பரிந்துரைகள், நூல் வெளியீடுகள், இளம் படைப்பாளிகளின் அறிமுகம் என தொடர்ச்சியாக எழுதிக் குவித்துவிட்டார்.






கடந்த முப்பது ஆண்டுகாலமாக எழுத்தோடு பயணிக்கும் எஸ்.ரா. கடந்த இரண்டு வாரங்களாக மகிழ்ச்சியோடு ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி ஓர் எழுத்தாளனுக்கு தனது எழுத்தை நேசிக்கும் வாசகர்களைச் சந்திப்பதோடு வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது. வாழ்த்துகள் எஸ்.ரா. !! 

இணைப்பு

No comments:

Post a Comment