Sunday, August 17, 2014

துட்டுக்கு பாட்டு - கவிஞர் வாலி

தமிழ் திரைப்பட பாடல்கள் "மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?"
என்பது பலகாலமாக தமிழ் சூழலில் கேட்கப்படும் பழைய கேள்வி.
இதற்கு "துட்டுக்கு பாட்டு " என்றார் கவிஞர் வாலி ஒருமுறை .

தற்போது, இந்த கேள்வியை யாரும் பாடலாசிரிடம் கேட்பது இல்லை.
அப்படியே கேட்டாலும் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன்பே அறிந்ததால் இருக்கலாம்.

பாடலுக்கு மெட்டு என்பதே மிக அரிதான ஒன்றாயிருக்கிறது.
திரை ஜாம்பவங்களாக பல ஆயிரம் பாடல்களை எழுதிய  வைரமுத்து, வாலி போன்றவர்களின் சில பாடல்கள் மட்டுமே மெட்டமைத்ததாக இருக்கும். இது காலத்தின் கட்டாயமே.

யாரோ சொன்னதுபோல, இந்தியாவில் கம்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் இல்லை.  அது போல தமிழ்  பாடல்கள் இருக்கின்றன, தமிழ் இசை இல்லை. மேற்கத்‌திய இசைக்கும், வாத்‌தியங்களுக்கும் நடுவே தமிழ் வரிகள் நிரப்படுகின்றன.

தமிழ் பாடலாசிரியர்கள் இந்த சவால்களை தாண்டி நல்ல கருத்தையும், கவித்துவமான விடயங்களையும் தர முயற்சிக்கிறார்கள். பாராட்டுக்கள்!.

வட்டத்திற்குள் வண்ணம் தீட்டுவது போல,  பாடலாசிரியரின் வேலை அவ்வளவு எளிதானது அன்று.

மேலும், திரை பாடல் என்பது ஒரு கூட்டு முயற்‌சி. இசையமையப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்தே
ஒரு பாடலுக்கு உயிர் தருகின்றனர். மேலும் இந்த அணிக்கு வணிகரீதியான அழுத்தங்கள் வேறு.

இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பாடலை கேட்டு நாம் "மொக்கை" என நொடியில் தீர்மானித்து விடுகிறோம்.

"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
"பெண் பார்த்தாய்" எனும் தலைப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியை நண்பர் ரவி இசை அமைத்து பாடலாக்க முயற்ச்சித்துள்ளார்.

" பெண் பார்த்தாய்,
நீ பெண் பார்த்தாய்,
பெண்ணையே பார்க்குமுன்
ஜாதகம் பார்த்தாய்,
பயோடேட்டா பார்த்தாய்,
நியூமராலஜியும் சேர்த்தே பார்த்தாய்! " 
......


இங்கே ஓலி வடிவில் பாடலை
கேட்டு மகிழுங்கள்:




இங்கே முழு கவிதையை  ஓலி வடிவில்
கேட்டு மகிழுங்கள்:




என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook


Please share your feedback.




















Saturday, August 2, 2014

நீங்கள் பேச்சிலரா (Bachelor) ?

வணக்கம், நீங்கள் ஒரு Bachelorரா?

ஆமாம் எனில் வாழ்த்துக்கள்!!.  இல்லை எனில் நீங்கள்  ஒன்றும் பெரிதாக
இழந்து விடவில்லை. ஏனெனில் நீங்களும் அங்கிருந்துதான் (பேச்சிலராக) வந்திருப்பீர்கள்.

நீங்கள் ஒரு பேச்சிலராக இருந்தாலும் ரொம்பவும் மகிழத்  தேவை இல்லை.
ஏனெனில் நீங்களும்  ஒரு நாள் மணம் புரியப் போகிறவர்தான். :)

"எது இன்று உன்னுடையதோ  அது நாளை மற்றொருவருடையதாகிறது"
-கீதாசாரம் போல ரொம்ப குழப்பமா இருக்கா?  சரி விடுங்க..

ஒரு தகவல் இந்தியாவின் மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதிற்க்கு உட்பட்டவர்களாம்.  பேச்சிலர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்தியா ஒரு மகிழ்ச்சியான
நாடே. அதையும் விடுங்க.

சமீபத்தில் படித்த கீழ்க்கண்ட வாசகமே, இந்த கட்டுரையின் தொடக்கம்.

"இளைஞர்களே, உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிடுங்க.  அதுக்கப்புறம் உங்களால டிவி சானலை கூட மாத்த முடியாது"

இதை படித்ததும், பேச்சிலர் பற்றிய என்னுடைய இந்த கவிதை ஞாபகம் வந்தது.

தலைப்பு: பேச்சிலர் (பேச்சு இலர்), "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.

Bachelor ஆன நான் பேச்சிலர் ஆகிறேன்,
உன் அழகு முகம் பார்க்கையில்!

மூளை இருந்தும் முட்டாள் ஆகிறேன்,
உன் கயல் விழி பேசும் மொழி புரியாமல்!

மொழி ஆய்வாளர்களே,
உலக மொழிகளின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் பேசும்
விழி மொழியையும் சேர்த்து!

ஆராய்ச்சியாளர்களே,
உலகப் புரியாத புதிர்களின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் காட்டும்
கடைக்கண் பார்வையையும் சேர்த்து!

இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்:



முடிவா பேச்சிலர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் இருக்கிறதில்லை,
கல்யாணமான எல்லாரும் சோகமாவும் இருக்கிறதில்லை.
மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்னு சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் மாதிரி முடிச்சுடுவோம்.

**
என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook