Monday, December 28, 2015

கடவுள் ஆவது

  நான் தீவிரமாக உரைநடை எழுதத் தொடங்கியபின் கவிதை எதுவும் பெரிதாக எழுதவில்லை அல்லது தோன்றியதை பதிவு செய்யவுமில்லை.

அதற்காக இரண்டும் வேறு வேறு உலகங்கள் என்று அர்த்தபடுத்திக் கொள்ளவேண்டியதில்லை. நாம் கவிதை என பெரிதாக நினைத்து அல்லது நம்பி கொண்டிருப்பதை சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளிலோ அல்லது நாவலிலோ மிக சர்வ சாதாரணமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எனது அனுபவத்தில் கண்டது.

சரி விஷயத்துக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன் 'கடவுள் ஆவது' எனும் தலைப்பில் எழுதிய கவிதை ஓன்றை இங்கே பகிர்கிறேன்.


கடவுள் ஆவது
-----

கடவுள் ஆவது அவ்வளவு
சிரமமாய் இருக்கவில்லை.

நேற்று நீர்வீழ்ச்சி வரைந்த
அதே தூரிகையில்

இன்று
பாலைவனத்தையும்
வரைந்து முடித்தபின்.




தொடர்ந்து வாசித்து, கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!. 2016ல் மேலும் பல வெற்றிகளை பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

-ஆரூர் பாஸ்கர்.

நன்றி:
Image: http://ngm.nationalgeographic.com




Sunday, December 20, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-5

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4  (முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக).

அமானுச சக்திகள் இருக்கின்றனவா இல்லை மூட நம்பிக்கையா? என்ற விவாதத்துக்குள் போகமால். பயண அனுபவமாக மட்டும் இதை படிக்கவும்.

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் உள்ளவர் அப்படினு வச்சுகிட்டா, உங்க ஆசை அதிகபட்சமா  என்னவா இருக்கும் ?

ராத்திரி பனிரெண்டு மணிக்கு சுடுகாடுக்கு இல்ல கல்லறைக்கு போறது ?  இல்ல பேய் நடமாடறதா சொல்லபடுகிற இடத்தை ராத்திரியில போய் பார்க்குறது ?


அப்படினா நீங்க நியூ ஆர்லியன்ஸை பார்க்க பிரியப்படுவிங்க. ஆமாம், இதுமாதிரியான விஷயங்கள் எல்லாம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ரொம்ப சகஜம்.  இதுக்காகவே ஓரு டூர் (அல்லது) சுற்றுப்பயணம் இருக்குனா பாத்துக்கோங்க. 

ஆம், நியூ ஆர்லியன்ஸ்  அமேரிக்காவின் 'அதிபயங்கர பேய் நகரம்'.  இந்த டூரை எனது 8 வயது மகள் கண்டிப்பாக பார்த்துவரச் சொல்லியதால் வேற வழியில்லாமல் பார்த்துவிட்டு வந்தேன். :)

(மேலே- ஸ்ட் லூயிஸ் கல்லறை)

டூர் இரவு 8 மணிக்கு தொடங்கி முடிய பத்து மணி ஆகிறது. Walking tour அல்லது 'நடை பயண' வகையைச் சார்ந்தது. ஓரு வழிகாட்டி பதினைந்து பேர் கொண்ட ஓரு குழுவை வழிநடத்துகிறார். பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுகிற இடங்களுக்கு நம்மை நடத்தி கூட்டிச் சென்று கதை கதையா எடுத்து விடுகிறார். அவரை ' வழிகாட்டி' என்பதை விட 'கதைச் சொல்லி' அப்படின்னு சொல்லலாம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி.


நியூ ஆர்லியன்ஸை பேய் நகரமானது எப்படி ? 

துர் மரணமடைபவர்களுடைய ஆன்மாவைதான் பேய், பிசாசு, மோகினி அப்படின்னு பல பெயரில் சொல்லும் நம்பிக்கை இருக்கிறது. அப்படி பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரில் மரணித்திருக்கிறார்கள். 

இந்த நகரில் தீ, தொற்றுநோய்கள், போர்கள் மற்றும் கட்ரீனா சூராவளி போன்ற பல பேரழிவுகளில் அவர்கள் மரணித்திருக்கிறார்கள்.

அதையும் தாண்டி, இன்னோரு விஷயம்  வன்முறை.  பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த நகரில் கட்டுப்பாடற்ற குடி,  மாது, அடிமைதனம்,சட்ட ஓழுங்கின்மை இவை ஓரு சாராரை வதைத்து, கொன்று கொடுமைப் படுத்தியுள்ளது. அவர்களின் கொடுமையான மரணங்களும் இதற்கு காரணமாயிருக்கலாம்.

அவர் காட்டிய சில இடங்களும் சொன்ன சில சுவாரசியமான விஷயங்களும்:

லல்வரே மாளிகை (Lalaurie House)-  இங்கிருந்த ஓரு சீமாட்டி (1834ம் வருட வாக்கில்) தனது மாளிகையில் பல கருப்பின அடிமைகளை சித்ரவதை செய்து கொன்றுள்ளார். கொடுமைனா எந்த அளவுக்குன்னா- உடல் உறுப்புகளை வெட்டி, கை, கால்களை பிணைத்து உயிருடன் ஆடு,மாடுகளை போல தொங்கவிட்டிருந்திருக்கிறார். இந்த இடத்தில் பேய் நடமாட்டத்தை பலர் பதிவு செய்திருக்கிறார்கள். மாளிகையின் பழைய படம் கீழே




புதிய படம்:


இணையத்தில் இது பற்றிய பல தகவல்கள், பேய் நடமாட்டத்திற்கான படங்கள் என பல கொட்டிக் கிடக்கின்றன.ஆர்வமிருந்தால் பாருங்கள்.

அப்புறம், இந்த மாளிகையை ஒரு துரதிஷ்மான இடமாகவும் சொல்கிறார்கள். உதாரணமாக சமீபத்தில் இதை வாங்கியபின்தான் மிகப் பெரிய ஹாலிவுட் நடிகர் நிக்கலஸ் கேஜ் படமே இல்லாமல் படு தோல்வியடைந்ததாரம்.

இன்னோரு சுவாரசியமானது-  ஓரு உணவகத்தில் தினமும் இரவு ஓரு வெற்று மேசையில் உணவு பரிமாறி வைத்து விட்டே பின்பே மற்றவர்களுக்கு உணவு தருகிறார்கள். கேட்டால், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்?. அங்கே தூக்கில் தொங்கிய அந்த இடத்தின் சொந்தக்காரர்  தினமும் உணவருந்த வருகிறாறாம். இந்த படத்தில் அந்த மேசையைப் பாருங்கள்.




சரி, நான் அங்கே பேய பாத்தேனா? அப்படின்னு நீங்க கேட்டா, அதுக்கான பதில் இந்த படத்துல. அந்த நீல நிற புள்ளியை கவனிங்க மக்களே!





இது நான் எடுத்தது. என்னுடன் அங்கே வந்தவர்களில் ஓரு பெண்மணி இது கண்டிப்பா அமானுச சக்தி அப்படின்னு பயபக்தியா சொன்னாங்க. இதை பார்த்த என் மகள் ' அப்பா போய் பொழப்ப பாருங்க' னு சொல்லிட்டா.  :)

பொழப்ப பாக்குறத்துக்கு முன்னாடி சின்னதா ஓரு ஜோக்: இப்படி தான் பேய், பிசாசு பற்றியேல்லாம் ஆராய்சி செய்யும் ஓருவர் தன்னோட நண்பர் கிட்ட ரொம்ப பெருமையா சொன்னாறாம். 'நான் இதை கடந்த 5 வருசமா பண்றேன். எனக்கு துளி கூட பயம் இல்லை' ன்னு. அதுக்கு நண்பர் சொன்னாராம் 'இது என்ன பிரமாதம் !? நான் ஓரு பிசாசு கூட 25 வருசமா குடும்பமே நடத்திகிட்டே இருக்கேன்'. அப்படின்னு.  கொஞ்சமாவது சிரிங்க பாஸ்!!  :)

நியூ ஆர்லியன்ஸ் பயணம் முடிந்தது!.
 
இதுவரை என்னுடன்பயணித்த அனைவருக்கும் நன்றி!!


படங்கள் நன்றி : GOOGLE

Sunday, December 13, 2015

தமிழ் சினிமா - அன்றும் இன்றும்

தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் தனியாக பிரித்துப் பார்க்க இயலுமா தெரியவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஆளும் மாநிலம் தமிழ்நாடு. உலகத்தில் வேறு எங்கும் இது போலதோரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை.  

நான் இங்கே தமிழ் சினிமாவைப் பற்றி எழுதக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் பழைய சினிமா டைரக்டர் ஓருவரிடமும், டிஸ்டிரிபியூட்ர் ஓருவரிடமும் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். 

முதலில் அந்த டைரக்டரைப் பற்றிப் பார்ப்போம். பெயர் வேண்டாமே. அவர் 80களில் பல நூறு நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம் ஓன்றைத் தந்தவர். அந்தப் படத்தின் பாடல்களை இன்றும் வானோலியில் நீங்கள் கேட்கலாம். அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வராமல் அல்லது வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியவர்.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் சமிபத்தில் தன் சொந்த செலவில் ஒரு படத்தை எடுத்து சரியாக டிஸ்டிரிபியூட் செய்ய இயலாமல் படு தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார். ஆசை யாரை விட்டது சொல்லுங்கள் ?. அதை 'ஆசை'  என்று சொல்லி ஓற்றைச் சொல்லில் என்னால் எளிதாகக் கடந்துச் செல்ல முடியவில்லை. ஏதோ ஓரு உந்துதல், ஆங்கிலத்தில் Urge என்று சொல்வார்கள் இல்லையா அது போல. தன்னை மீண்டும் நிருபிப்பேன் என்ற எண்ணம் தான் வேறு என்ன.

சரி போகட்டும். இவர் தன்னுடைய வாலிப வயதில் தமிழ்த் திரை உலகின் ஜாம்பாவான்களிடம் பால பாடம் படித்தவர்தான்.  தன்னுடைய நேரத்தையும் விதியையும் குறை சொல்லும் அதே நேரத்தில் தமிழ்த்திரை உலகின் இன்றைய நிலை பற்றி ஆற்றாமையோடு புலம்பிக் கொண்டிருந்தார்.

விஷயம் நாம் அறிந்த ஓன்றுதான். தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் நிலையாமை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் பற்றிதான். கதை, நட்சத்திரங்கள்,பாடல்கள், தயாரிப்பு, விற்பனை, விநியோகம்,தொழில்நுட்பம் என பெரிய பட்டியலே வாசித்தார். எல்லா முனைகளிலிருந்தும் நெருக்குதல் என்கிறார். 

தாறுமாரான தயாரிப்பு செலவு. அதே நேரத்தில், பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் படம்கூட வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்லை. இவ்வளவு தெரிந்தும் படத்தின் வெற்றி தோல்விபற்றி கவலைப்படாமல் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாத நடிகர்கள். 

தனது கவர்ச்சியையும்  பொலிவையும் இழந்து வரும் மனதில் நிற்காத இசை மற்றும் பாடல்கள்.  அப்படி வரும் பாடல்களையும் டிஜிட்டலில் விலையின்றி தரவிரக்கம் செய்யும் இளைஞர்கள்.  இதன் தொடர்சியாக சில வருடங்களில் ஆங்கிலப் படங்கள் போல பாடல்களே இல்லாது படங்கள் வரும் காலம் தூரத்தில் இல்லை என்கிறார். இனி பாடலுக்காக ஓடிய படங்கள் வரப்போவதே இல்லை என உறுதியாகச் சொல்கிறார்.

கதைப் பற்றாக்குறை- முன்பே சொல்லப்பட்ட கதை அல்லது கதாபாத்திரங்கள். ரசிகர்களின் உலகத்தரமான  எதிர்பார்ப்பு, இணையம் என இது ஓரு பக்கம்.

அப்புறம் எல்லோரும் படம் எளிதாக படம் எடுக்கலாம் என்ற சூழலில் வெளியிட
தியேட்டர்கள் கிடைக்காத நிலை.  அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் முன்னூறு, ஐநூறு என டிக்கெட்டுக்கு அடங்காமல் கொட்டமடிக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர்  உரிமையாளர்கள்.

24 X 7 டிவி சானல்கள், சீரியல்களைத் தாண்டி முன்னூறும் ஐநூறும் கொடுத்து படம் பார்க்கவருபவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.  புதுப்புதுக் கேமராக்கள்,லென்சுகள் என மாறும் தொழில்நுட்பம். அத்தனையும் தாக்குப்பிடிக்கும் சூட்சுமம். இப்படிப் பல. 

திருட்டு விசிடிக்கள், இணையம் என எளிதாக நடைபெறும் திருட்டு. இதற்கு சேரனின் Direct to Home அல்லது DTH நல்ல மாற்றாக இருக்கும் என நம்பும் அதே வேலையில் திரைத்துறையில் சிலர் இதைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய முயலுவதையும்  சுட்டிக் காட்டினார்.

முன்பேல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சில நடிகர்களின் படமெனில் ஓரு மினிமம் கியரண்டி இருந்தது. அந்த காலம் மலை ஏறிவிட்டது. அப்படி வளர்ந்து வந்தவர்கள் தானே இன்றைய விஜயகாந்த் போன்ற நடிகர்கள் என்கிறார் நான் பேசிக் கொண்டிருந்த பழைய விநியோகஸ்தர்.

அவரும் 80களில் மதுரையில் விநியோகஸ்தரராக பல வருடங்கள் இருந்தவர் தான். நடிகர்கள் விநியோகஸ்தர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வைத்திருந்த மரியாதை சுத்தமாய் போய்விட்டது. நட்சத்திரங்களை சுற்றி மட்டுமே மொத்த படக்குழுவும்  இயங்கத் தொடங்கிவிட்டதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். 

உச்ச கட்ட நடிகரிடம் தானே தமிழ்நாடு வெள்ள நிவாரணத்தை எதிர்பார்கிறது. ஏன் ஓரு உச்சகட்ட டைரக்டரிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதற்கான விடை மேலேயே இருக்கிறது.

இப்போது ஸ்டாக் மார்க்கெட் வணிகத்தில் இருக்கும் இவர் கமல் ஓருமுறை இவரை காரிலிருந்து இறங்கிவந்து மரியாதை செய்ததை நினைவு கூர்ந்தார். அந்தநாளில் ரஜினியுடன் ஓரு விநியோகஸ்தராக தன்னால் 3 மணி நேரம் பேசமுடிந்தது என்று சிலாகிக்கும் இவர். AVM தனது படத் தயாரிப்பை நிறுத்தி, அடுக்குமாடி கட்டிடம் பக்கம் திரும்பியது கூட இந்த காரணங்களுக்காக தான் என்கிறார்.

சினிமா உலகத்தில் பார்வையாளர்களைத் தாண்டி ஓட்டு மொத்த தொழிலும் மாறி விட்டதை தெளிவாக உணர முடிகிறது. 'மாற்றம் என்ற சொல்லே மாறாதது' என்பார்கள். அது போல மாறும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல மாறாதவர்கள் கரை ஓதுங்கிய சிப்பிகள்.  அவர்கள் கடலை வெறித்துப் பார்ப்பதன்றி வேறேன்ன செய்ய, சொல்லுங்கள் !.

குறிப்பு: இது எனது சொந்தக் கருத்து மட்டுமே.

நன்றி: google images

Wednesday, December 9, 2015

2015 தீபாவளி கலை நிகழ்ச்சி -டண்டனக்கா


இங்கே அமேரிக்காவில் தென் ஃபுளொரிடா நிலப் பரப்பில் மிகப் பெரியது தான். ஆனால் தமிழர்களின் அடர்த்தி எனப் பார்த்தால் குறைவே.  அட்லாண்டா,சான் ஃபிரான்ஸிஸ்கோ போன்றவற்றுடன் எண்ணிக்கையில் ஓப்பிட்டால் மிகச் சொர்ப்பம் தான். நான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குஜராத்தவர்கள் தான் அதிகம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம் சனிக்கிழமை தென் ஃபுளொரிடா தமிழ்ச் சங்கம் நடத்திய 2015ம் ஆண்டுக்கான தீபாவளி கலை நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்.   கடந்த வருடத்தை விட இந்த வருட நிகழ்ச்சிகளில் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. அதிலிருந்து சில துளிகள்.

ஆங்கிலத்தில் சொல்வது போல முதலில் நல்ல விசயங்கள் (Good things First).

* கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதாகர் அருமையாக பாடி எல்லோர் மனங்களையும் வென்றார்.  அவருக்கு இணையாக இந்த வருடம் ராதாகிருஷ்ணனும்,  அனிதா ஜோசபும். வாழ்த்துக்கள்!!

* நல்ல இரவு உணவு உபசரிப்பு. குறை ஒன்றும் இல்லை எனச் சொல்லத் தோன்றியது. அதிலும் அந்த இனிப்பு ! ஏதோ, ஹைதெராபாத் வகையராவாம். வாழ்க !

* ஆர்வத்துடன் பலர் கலந்துக் கொண்டனர். மற்றுமின்றி சில பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு அசர வைத்தன. வாழ்த்துக்கள்! குறிப்பாக, குட்டிப்பையன் ஓருவனின் ஆட்டம் (டண்டனக்கா?) அசத்தல்.

மற்ற முக்கியமான விசயங்களுக்கு வருவோம்.

* முதலாக வரவேற்புரை- வருடத்துக்கு ஓருமுறை நடக்கும் இந்த பெரிய விழாவுக்கு, வழங்கப்பட்ட முன் தயாரிப்பற்ற வரவேற்புரை ஓன்று அல்லது இரண்டு நிமிடங்களைத் கூடத் தாண்ட வில்லை. இங்கே 300 பேர் என்பதே பெரிய எண்ணிக்கை. அப்படி இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் கவனத்தை வரவேற்புரையில் ஈர்க்கத் தவறிவிட்டனர்.

 *நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு - அல்லது Coordination. சரியாக தொகுத்து வழங்கப்படாத நல்ல நிகழ்ச்சி கூட பார்வையாளர்களால் கவனிக்கபடுவதில்லை அல்லது அவர்களுக்கு மனநிறைவாய் இருப்பதில்லை.

*இந்த முறை சங்கத்தின் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பேச, தொகுத்துவழங்க வாய்ப்பு வழங்கியிருந்தார்கள். நல்ல முயற்சி தான். ஆனால் 'நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு' என்பது ஓரு கலை. அதற்கு நிறைய பயிற்சி தேவை என்பதை இப்போது அனைவரும் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

*உதாரணமாக, நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்பதைத் தாண்டி நிகழ்ச்சி நடக்கும் போது கூட சிறுசுகள் விளையாடியபடியும், பெருசுகள் செல்லில் நோண்டியபடியும் அல்லது பக்கத்தில் பேசியபடியும் இருந்தனர். மேடையில் தோன்றிய நல்ல திறமையான பலரை இதனால் கவனிக்க இயலவில்லை. 

*ஓருங்கிணைப்பு குறைபாடு என மேலே சொன்னதை சுத்தமா ஓதுக்கவும் முடியவில்லை. பெற்றோர்களும் கொஞ்சம் யோசிங்க,  இதே விஷயத்தை வெளியே ஓரு திரை அரங்கில் செய்வோமா?. தமிழ் நிகழ்ச்சின்னு கூடுதல் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறோமா?

*நிகழ்ச்சி நிரலின் முதல் பக்கத்தில் தப்பான வருடத்தை அச்சடித்ததிலிருந்து பல குளறுபடிகள் இருந்தன. அதன் உச்சமாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓரு பெண்கள் குழுவை மேடையில் அறிமுகம் செய்ய, வந்து ஆடியதோ ஆண்கள் குழு.

*விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்ன போட்டி, எப்போது நடந்தது, யாருக்கு, எதற்காக விருது ? ஓன்றும் பார்வையாளர்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. மின்னல் மாதிரி அந்த முக்கிய நிகழ்வு நடந்து முடிந்தது. அந்த நிகழ்வு வென்றவரை வாழ்த்தவும், கலந்து கொள்ளாதவர்களை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா. நேரமின்மை என்பதால்... 

*நிகழ்ச்சியில் சென்னை அடர் மழை நிவாரணத்துக்கு நிதி சேகரிப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அதற்காக ஓரு விண்ணப்பத்தையும் கூட வாசலில் வைத்திருந்தனர். ஆனால், விழா முடிந்ததும் பலர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை என்ன செய்வது , யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல் குழம்பி அதை வெறுமனே அங்கேயே வைத்துச் சென்றதைப் பார்க்கையில் மனது வலித்தது.

ஓருவரை பொறுப்பாளராக நியமித்திருந்து, நிகழ்ச்சியில் சரியான முறையில் followup செய்திருந்தால் ? 300 பேர் ஓன்றாகக் கூடிய இடம். We lost a golden opportunity to raise the fund. for sure!!. ஆங்கிலத்தில் எழுதினால் நேரடியாக போய் சேராதா என்ற சின்ன ஆசைதான்.

இதேல்லாம் நடந்து, எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திற்கு முன்பே அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலையிலேயை  மத்திய ஃபுளோரிடா முத்தமிழ்ச் சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் சென்னை மக்களுக்குச் சென்று சேர்ந்திருந்தது. நன்றி, வாழ்த்துக்கள் ஃஓர்லாண்டா மக்களே! அந்த படம் இங்கே. ( நன்றி : நண்பர் விஜய செந்தில்)









காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - யாரோ சொல்லக் கேள்வி.


*நான் கேட்டவரை மொத்தமாக திட்டமிடப்பட்ட  20 நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர்த்து வந்த 'நீல மயில் மீது' எனும் முருகன் பக்திப்பாடல் மட்டுமே சினிமா சம்பந்தப்படாதது.

 *தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் திட்டமிட்டு பரப்பப்படும் சினிமா. கடல் தாண்டி வந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை தான். ஆனால் அதுவும் அனைத்தும் 'குத்து' பாட்டு ரகமாகத்தான் இருக்க வேண்டுமா ?

*அந்த பாடல்களிலிருக்கும் சில வரிகள் தாங்க முடியவில்லை. 'பல்லாவரம்..' ன்னு ஏதோ ஓரு பாட்டுக்கு ஆடினாங்க. அதுல ஓரு வரி வருது 'நாளேல்லாம் தண்ணியடி'ன்னு. பக்கத்துல விவரம் புரியாம விசாரிச்சா. சென்னையில தண்ணி கஷ்டமா இருக்கச்ச எழுதியிருப்பாங்கன்னாரு. 'சரி' ங்கறதா இல்ல 'சிரி'க்கிறதான்னு புரியல.

*சிறுவர்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும் நடனமாடிய குடும்ப பெண்களும் அந்த மாதிரியான பாடலைதான் தேர்வு செய்திருந்தனர்.  அவர்களின் உழைப்பு ஆபாசமற்ற அந்த நடனத்தில் தெரிந்தது.  கண்டிப்பாக அதை எதாவதோரு தமிழ் நாட்டுப்புற பாடலுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

அமேரிக்காவில் இருக்கும் குழந்தைகளுக்கு நாமாவது நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துவோமே. குத்துப் பாடலுக்குதான் சூப்பரான பல சிங்கர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே. தமிழ் நாட்டுப் பாடலும் துள்ளலிசையே, அது எந்த விதத்திலும் குத்துப் பாடல்களுக்கு குறைந்ததில்லையே.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன,  என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் பண்பாட்டை,பெருமையை காக்கும் நிகழ்ச்சியா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆடிப் பாடி, மகிழத்தான் இந்த கொண்டாட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், முன்பேல்லாம் திபாவளி, பொங்கல் போன்றதோரு  கொண்டாட்டங்களில் இந்த 'துக்கடா' க்கள் ஓன்று, இரண்டு கண்டிப்பாக இருக்கும். சமீபகாலங்களில் ? எல்லாமே வா ?

ஆங்கிலத்தில் சொல்வது போல் இதுதான் New Normal ?? அதற்கு தமிழ் சங்கங்கள் துணைதான் போக வேண்டுமா ?  நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டும்.

மற்ற அமேரிக்க தமிழ்ச் சங்கங்கள் எப்படி இதை எதிர்க் கொள்கிறார்கள் ? பிரத்தியேகமாக Item Songs நிகழ்ச்சி? தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை பதிலிடுங்கள்.

கடந்த வருட நிகழ்வின் போது எழுதிய  இந்த பதிவில் பழசு இப்படி எழுதியிருந்தேன்.

"நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை."

துரதிஷ்டவசமாக, இந்த வருடம் நான் மிகக் களைப்பாக உணர்ந்தேன்.

குறிப்பு:: இது நான் பார்த்து, சிலர் சொல்லக் கேட்ட என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நம்முடைய பங்குக்கு ஓரு சிறு கல்லை நகர்த்த முயற்சிக்கலாம் என்று . :)

Tuesday, December 1, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-4

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3  முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக.

குறிப்பாக, இந்த கட்டுரையை வாசித்து தொடர்ந்து வாசித்து போனிலும், மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!.  யாராவது ஓருத்தர் சொன்னாலும் இப்படிதான், அதை கண்டுகாதிங்க  .. :)

அப்புறம்,  நாம் இதுவரை நியூ ஆர்லியன்ஸ் நகரைப் பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை. இன்னைக்கு அதப் பத்தி பார்க்கலாம்.

நிறைய எழுத முடியாவிட்டாலும் நியூ ஆர்லியன்ஸ் பற்றி சில முக்கியக் குறிப்புகள் இங்கே. 

  1. நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருக்கும் லூசியானா மாகாணத்தின் பழையப் பெயர் புதிய பிரான்ஸ்.
  2. ஆம், முதலில் லூசியானா  பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு நெப்போலியனால் 1803 இல் லூசியானா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது.
  3. ஆரம்ப காலங்களில் சர்க்கரை மற்றும் பருத்தி இதன் பிரதான பயிராக இருந்தது. அவ்வாறு பயிரடப்பட்டவை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தின் வழியாக மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
  4. அடிமைகள் வர்த்தகத்திலும் இந்த நகரம் மிக முக்கியஇடம் வகித்துள்ளது.
  5. இருபதாம் நூற்றாண்டிலும் ஓரு வர்த்தக நகராகவே நியூ ஆர்லியன்ஸ் தொடர்ந்தது.
  6. 1960களில் சிவில் உரிமைகள் இயக்கத்திலும் இந்த நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது
  7. நியூ ஆர்லியன்ஸ் தனது தனிப்பட்ட கட்டடக்கலை பாணியால் உலக புகழ் பெற்றது.
  8. jazz இசை பாரம்பரியம் இதன் தனித்தன்மை. அதுபோல கடல் உணவுகள் இங்கே ரொம்ப மவுசு
 ஆற்றின் கரைகளில் அல்லது படுகைகளில் தான் நாகரிகம் தோன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. அப்படி மிசுசிபி ஆற்றின் கரையில் தோன்றிய நகரம்தான் நியூ ஆர்லியன்ஸ்.
இது அமேரிக்காவில் உள்ள மிகப் பழமையான வரலாற்றுப் பிண்ணனி உள்ள நகரங்களில்  இதுவும் ஓன்று.   குறிப்பா சொல்லனும்னா மிசுசிபி மெக்ஸிக்கோ வளைகுடாவில் கலக்கும் இடத்தில் தான் நியூ ஆர்லியன்ஸ் நகர் இருக்கிறது.  ஆற்றின் போக்கை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.



மிசுசிபி என்பதற்கு "கிரேட் ரிவர்" என பூர்விக குடிகளின் மொழியில் பொருள்படும். நியூ ஆர்லியன்ஸில் எவ்வளவோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது. நேரமின்மையால்,  நான் ஓரு சில இடங்களை மட்டுமே பார்த்தேன்.  அதில் மிசுசிபிஆற்றுப் பயணம் நான் ரசித்த ஓன்று. அதைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

தற்போது அமேரிக்காவில் நீராவியால் இயங்கி புழக்கத்தில் உள்ள ஓரு சில படகுகளில் இதுவும் ஓன்று. இதன் மொத்த பயண நேரம் 2 மணி நேரங்கள். 





பயணத்தின் போது, நியூ ஆர்லியன்ஸ நகர வரலாறு, ஆற்றின் ஓரத்தில் இருக்கும் தொழிற்ச் சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் அதன் புராதான சிறப்புகள் என்றபடி நீள்கிறது. அந்த 2 மணி நேரங்கள் போனது தெரியவில்லை.

மரங்கள் மற்ற பிற உற்பத்தி பொருட்களும் ஆற்றின் ஓரங்களில் இருந்து பார்ஜ் என்ற சிறிய படகுகள் மூழமாக கடற்கரைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்து செல்வது அழகாக இருக்கிறது.

அங்கு நின்று கொண்டிருந்த ஓரு அமேரிக்கப் போர் கப்பலைக்  'கிளுக்'கினேன்.




அது மட்டுமில்லாம, லைவ் JAZZ இசையும் படகில் இசைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அங்கேயே உணவும் கூட சாப்பிடலாம்.

ஓரு காலத்தில்  கொடி கட்டி பறந்த இந்த மாதிரியான நீராவி கப்பல்கள் மற்றும் படகுகள் இப்போது ஓரு காட்சிப் பொருள்தான் என்பதே நிதர்சம். பழையன கழிதலும்...

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் இல்லை ஈடுபாடு (?) இருந்தா  அடுத்த பதிவை படிக்க தவற விட்டுடாதீங்க..    ஆனால், பேய் படம் பார்பதற்கு பயப்படுவரா இருந்தா?  எதுக்கும் pls wait.. :)

பயணங்கள் முடிவதில்லை...

படங்கள் நன்றி :
http://www.steamboatnatchez.com