Friday, November 10, 2023

உருப்படியாக வாழ

தமிழ் நாளிதழ்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அதாவது புத்தக வாசிப்பு, திருக்குறள் முற்றோதல், தமிழ்மொழி வளர்ச்சி , சேவை தொடர்பான பல முன்னெடுப்புகள் அரசுப் பள்ளி மற்றும் கலைக் கல்லூரிகளில் மட்டும் நடப்பது போலவும்

100 சதவீத தேர்ச்சி, அறிவுசார் போட்டிகளில் பங்களிப்பு, முதல் மதிப்பெண், அறிவியல் கண்டுபிடிப்பு, காம்பஸ் இன்டர்வியூ (வளாகத் தேர்வு) , வேலைவாய்ப்பு போன்ற விசயங்களில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முன்னிப்பது போல கட்டமைக்கப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் களையப்படவேண்டியது மிக அவசியம். அதாவது,  பயன்படாத விசயங்களுக்கு அரசுசார் நிறுவனங்கள்,  வெற்றி பெற்று உருப்படியாக வாழ தனியாரை அணுகுங்கள் என்பது மறைமுகமாக விதைக்கப்படுகிறது.  


கூடவே வெற்றி பெற தாய்மொழி கல்வியோ ஏன் அடிப்படை அறமும் கூட  இளம் வயதில் தேவையில்லை என்பதும் நுழைக்கப்படுகிறது.

இப்போது காட்சி ஊடகங்கள் போல எழுத்து ஊடகமும் முற்றிலும் பொழுதுபோக்கின் ஊற்றுக்கண்ணாகி விட்டதோ என்றுகூடத் தோன்றுகிறது.