Wednesday, January 29, 2020

2019-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

2019-இல் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

1, The 4-Hour workweek- Timothy Ferriss
2, How to win friends and influence people - Dale Carnegie
3,வணக்கம் - வலம்புரி ஜான்
4, ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள் -சாரு நிவேதிதா
5, ஒரு கூர்வாளின் நிழலில்  - தமிழினி
6,மழைக்கால இரவு- தமிழினி
7.வாழ்க திராவிடம் - இனமானப் பேராசிரியர் அன்பழகன்
8.கன்னிவாடி - எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்
9.ஒரு பெண் கதை சொல்கிறாள் - கன்னடம் யஸ்வந்த சித்தால
(தமிழில் டி.பி.சித்தலிங்கய்யா)
10.தண்ணீர் - அசோகமித்திரன்
11.ஆறாவடு - சயந்தன்
12.A Soldier's Sketchbook - John Wilson
13.மிளிர்கல் -இரா.முருகவேள்
14.Silk Road - Kathy Ceceri
15.27-யாழ்தேவி - ஆசிரியர்: ஈழவாணி
16.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
17.குறத்தி முடுக்கு- ஜி.நாகராஜன்
18.What I talk When I talk about running - Haruki Murakami
19.Dance Dance Dance- Haruki Murakami
20.நெஞ்செல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால்
21.Emotional Wellness - Osho
22.First They Killed My Father: A Daughter of Cambodia Remembers - Loung Ung
23.Guns across America - Robert J Spitzer
24.Bitcoin Explained (Ultimate Guide to understanding Block chain
and investment in Currencies) - James Hartnett
25.Cryptocurreny for beginners - Michael Scott
26.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
27.How to Write Fiction without The Fuss  - Lucy Mccaramer
28.எம்டன் செல்வரத்தினம் (சென்னையர் கதைகள்)- கிழக்கு பதிப்பகம்
29.Beyond the tiger mom : East-West parenting for the global age - Thiagarajan, Maya
30.நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ? - பேராசிரியர் த.செயராமன்

ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் Duel

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் உலகம் முழுதும் அறியப்பட்ட ஹாலிவுட் இயக்குநர். ஜூராசிக் பார்க், ஜாஸ் (Jaws) , ஈ.டி. (E.T.), மைனாரிட்டி ரிப்போர்ட், ஏ.ஐ. (A.I.) என பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியர்.  புகழ்பெற்ற இயக்குநர் என்பதைத் தாண்டி அவர் ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளரும் கூட. இரண்டு முறை  ஆஸ்கார் விருது பெற்ற அவருடைய முதல்படமான Duel (1971) -ஐ சமீபத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ('Duel' - தமிழில் 'ஒண்டிக்கு ஒண்டி' என நேரடியாக மொழிபெயர்க்கலாம்)

படம் அதிரடி திரில்லராக இருந்தாலும். படம் பார்த்த எனக்கு ஒரு வித அதிர்ச்சி.  காரணம், ஒத்த செருப்பு போலொரு படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியதைப் போல உணர்ந்தேன். அதாவது, ஸ்பில்பெர்கின் பல பிரமாண்ட படங்களின் வழியாக அவர் குறித்து  என் மனதில்  வேறொரு சித்திரம் இருந்தது.

Duel படத்தின் கதை இதுதான். ஒரு நெடுஞ்சாலையில் நாயகன், தன் காரை ஓட்டிக்கொண்டு செல்கிறான். அவனுக்கு முன்பாக ஒரு டிரக், அவனுக்கு வழி விடாமல் சாலையை மறித்துக்கொண்டு செல்கிறது. காரில் இருக்கும் நாயகன், அடிக்கடி 'ஹாரன்' அடித்துப் பார்க்கிறான். பயனில்லை. தொடர்ந்து நந்தி போல சாலையை மறைத்து போகும் டிரக்கோ அவனுக்கு  வழி கொடுப்பதாக தெரிய இல்லை.

இப்படிப் பிடிவாதமாக வழியை அடைத்தபடி செல்லும் டிரக் மேல் எரிச்சடைந்த நாயகன் ஒருகட்டத்தில் சாமர்த்தியமாக சந்தில் புகுந்து டிரக்கைச் சட்டென முந்தி சென்று விடுகிறான். வந்தது வினை. டிரக்கில் இருக்கும் அந்த முகமறியா மனிதன் நாயகனுக்கு எதிராக, எமனாக திரும்பி விடுகிறான்.

அங்கிருந்து இடைவேளையின்றி காரில் இருக்கும் நாயகனும், முகமறியா டிரக் டிரைவரும் நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும் மூர்க்கமாக தாக்கிக் கொண்டும் படம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.  இறுதியில் யார் யாரை வென்றார்கள் ? எப்படி? என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் (யூ.டியூயில் கிடைக்கிறது).

இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டியது திரைக்கதை பற்றி. அதாவது,
எந்தவொரு கிளைக் கதைகளும் இல்லாமல் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு நாயகனை மட்டும் வைத்து திரைக்கதை அமைத்து ஸ்பில்பெர்க் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் முதல்படம். வெளியில் இருந்து பார்த்தால், படம் இரண்டு வாகனங்களுக்கு இடையேயான போட்டி என்பது போல தோன்றினாலும் அது மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் நடக்கும் போராட்டம் என்பதை நம்மால் பட உணர்ந்துகொள்ள முடியும். காலத்தை வென்று நிற்கும் படம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.



Wednesday, January 1, 2020

தமிழ்த்திரையுலகில் இரட்டையர்கள்


தமிழ்த்திரையுலகில்  இரட்டையர்களுக்கு என்று ஓர் இடம் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. முன்பு  இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மனோஜ் கியான் எனும்  அந்த வரிசையில் இன்று சபேஷ் - முரளி... அதுபோல பாரம்பரிய சங்கீதத்தில் சூலமங்கலம் சகோதரிகள்,  பாம்பே  சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி. நாட்டுப்புறப் பாடலில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி- அனிதா, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி இணை என அங்கேயும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தவகையில் திரைப்படத்
தொகுப்பாளர்களாக பி. லெனின்-வி. டி. விஜயன் நினைவுக்கு வருகிறார்கள்.



அதாவது ஒத்தத் துறையில் இணைந்து செயல்படுபவர்களைப் நாம் பேசுகிறோம். வைரமுத்து-ஏ.ஆர் ரகுமான் போன்ற வெற்றிக் கூட்டணிகள் என்பது வேறு.ஆனால், எழுத்தில்  இரட்டையர்கள் என்றால் நமக்குச் சட்டென நினைவுக்கு வருபவரகள் சுபா மட்டுமே. நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என இருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தை எடுத்து சுபா எனும் புனைப் பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள்.  மற்றபடி தமிழ் எழுத்துத்துறையில் இரட்டையர்களைச் சிரமப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது

எழுத்து என்பது தனிமையோடு தொடர்புடையதாலோ என்னவோ அது பெரும்பாலும் தனி ஆவர்த்தனமாகவே இருந்திருக்கிறது.   ஆனால்,  ஆங்கிலத்தில் John Lennon & Paul McCartney போல பல இரட்டை பாடல் ஆசிரியர்கள் duo songwriters உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள். 

அதுபோல நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் அமெரிக்க ஆசிரியர்களான கேத்லீன் ஓ’நீல் கியர் அவருடைய கணவருடன் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அதுபோல மார்சியா முல்லர் மற்றும் பில் ப்ரோன்சினி (Marcia Muller and Bill Pronzini) எழுத்துலகில் உலகப்புகழ் பெற்ற இணை.

இங்கே அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றவர்களுடன் இணைந்து எழுதுவதும்  பரவலாக நடக்கும் விசயமே. அதாவது எழுதுவது என்பது ஒரு தனிமையான முயற்சியாக இருந்தாலும் ஒத்தக் கருத்துள்ள இரண்டு ஆளுமைகள் இணையும்போது ஆச்சரியமான கதைகள் சுவாரஸ்யமான நடையில் உருவாக வாய்ப்புள்ளன. அந்த வகையில் பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன் மற்றவர்களுடன் இணைந்து பல படைப்புகளை எழுதித் தள்ளியிருக்கிறார். அவர்   அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் இணைந்து சமீபத்தில் எழுதிய ”அதிபரைக் காணவில்லை” (The President is Missing by Bill Clinton and James Patterson ) வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.  சிறார் புத்தகங்களையும் எழுதியிருக்கும் ஜேம்ஸ் பேட்டர்சன் ஃபிளாரிடாவில் வசிக்கிறார். எனக்கு உள்ளூர்காரரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு மகளுடன் போய் அவருக்குச் சின்ன ஹலோ சொல்லிவிட்டு வந்தோம். 

என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் விரும்பும் ஒரு நல்ல படைப்பைத் தர ஒத்த நடையுள்ள இருவர் இணை ஆசிரியர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருவேறுபட்டத் தளங்களில் இயங்குபவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி, மேற்குலகில் பிரபலமான எழுத்தாளர்கள் கூட்டுசேர்ந்து புனைவு எழுதுவதை நாம் விட்டு விடுவோம். தமிழில் ஓரளவு பெயர் தெரிந்த எழுத்தாளர்கள் இணைந்து புனைவு ஏன் , நான்கு வரியில் ஒரு கட்டுரையைக் கூட எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை.

நான் இதையெல்லாம் எழுதக் காரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் தனது நண்பர் ராமசேஷன் எனும் கணினிப் பொறியாளருடன்  இணைந்து  ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” எனும் புத்தகத்தைக் கொண்டுவருகிறேன் என எழுதியிருந்தார். இலக்கணத்துக்கும் சாருவுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பவர்களுக்கும் அவர் தனது தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள்.

இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இணையாசிரியராக சேர்ந்து எழுத முன்வந்திருப்பது நல்லதொடக்கம். ஓரளவு புத்தகத்தையும் இணையாசிரியரையும்  சேர்ந்து பிரபலப்படுத்தும். இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்!