Saturday, May 30, 2026

தோடுடைய செவியாள்

இரயிலில் எதிரே அமர்ந்திருந்த பெண் தனது காதில் அணிந்திருந்த வைரக் கம்மலைக் கழட்டினார்.  பின் தனது செல்போன் கவரைப் பிரிக்கத் தொடங்கினார்.



ஜேம்ஸ்பாண்ட் போல செல்போன் கவருக்குள் அந்த வைரத்தை மறைத்து வைக்கப்போகிறார் என ஆர்வமுடன் கதாசிரியர் கவனித்தார். ஆனால்..

அம்மணியோ... பொறுமையாக செல்போன் கவரைப் பிரித்து விட்டு வைரத்தோட்டின் கூர்மையான பின்புறத்தை சிம்கார்ட்டை குத்தி எடுக்கும் கருவியாக்கி சிம்கார்டை சவகாசமாக வெளியே எடுத்தார். 

எத்தனை கோடி நரம்புகள் மூளையில் வைத்தாய் எங்கள் இறைவா !!

#தோடுடையசெவியாள்


Monday, May 25, 2026

கங்கணம் கட்டி திரியவில்லை

நேரத்தைக் காரணம் சொல்லி கவிதைகளையோ, கவிதை நூல்களையோ வாசிக்க மாட்டேன் என்றெல்லாம் கங்கணம் கட்டி திரியவில்லை.


கவிதைகளைத் தேடித் தேடி படிப்பதில்லையே தவிர சிறப்பான கவிதைகள் கண்ணில் பட்டால்.. படித்து, பாராட்ட தவறுவதில்லை.

அப்படிச் சமீபத்தில் பட்ட கவிதை ஒன்று அமெரிக்காவில் இருந்து எழுதும் கவிஞர் பிரதீபா பிரேம் எழுதியது

"விரித்த கைகளோடு

விசும்பினை நோக்கி

இயற்கையிடம்

முறையிட்டுக் கொண்டிருக்கும்

மரக் கூட்டங்களை..."

எனும் அந்தக் கவிதை 'மரங்கள்' குறித்து கவிக்கோ அப்துல் ரகுமான்  "நேயர் விருப்பம்" தொகுப்பில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தியது. அந்தக் கவிதை

"மரங்களே! பூமியின்

வரங்களே!

விதை வாமனனின்

விசுவ ரூபங்களே!

நீங்கள் 

ஓவியமாகவே

உருவெடுத்தத் தூரிகைகள்.."

இப்படி ஒரு கவிதையோ அல்லது ஒரு கவிதையின் வரி கூட ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. அப்படி வரும் நினைவு என்பது கூட தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது.

Saturday, May 2, 2026

“சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை ?

சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை என்று பதின்வயதிலேயே சிந்தித்தாக All Our Loves: Journeys with Polyamory in India  எனும் ஆங்கில நூலின் ஆசிரியர் Arundhati Ghosh எழுதியிருக்கிறாராம். இதை அம்ருதா இதழில்  பதிவு செய்திருப்பவர் ஜெ.தீபலட்சுமி.






வாய்ப்பிருந்தால் வாசித்துப் பார்க்கவேண்டும்.



Thursday, March 26, 2026

Celebrating 10 Years of VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition)

 A decade ago, a story crossed borders and found its place in the hearts of tamil readers.



வனநாயகன்: மலேசிய நாட்கள் / VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition) is more than a novel — it is a journey of identity, struggle, and belonging.



Wednesday, March 25, 2026

10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)

சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.

இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம்.  அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.


அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில்  நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".

சதீஸின் இணைப்பு கீழே..

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html