திருக்கார்த்தியல் வாசக நண்பர்கள் அறிவித்திருக்கும் பரிசுப்போட்டி.
திருக்கார்த்தியல் விருதுகள் 2026
எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே..
திருக்கார்த்தியல் வாசக நண்பர்கள் அறிவித்திருக்கும் பரிசுப்போட்டி.
திருக்கார்த்தியல் விருதுகள் 2026
அந்திமழை இதழ் ஆண்டுதோறும் 'இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி'யை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான (2026) போட்டி 40 வயதுக்குட்பட்ட இளையோருக்காக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கீழே..
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !. இதில் நண்பர் எழுத்தாளர் அரவிந்தின் ‘Function’ சிறுகதை இந்த இளையோர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.
இரயிலில் எதிரே அமர்ந்திருந்த பெண் தனது காதில் அணிந்திருந்த வைரக் கம்மலைக் கழட்டினார். பின் தனது செல்போன் கவரைப் பிரிக்கத் தொடங்கினார்.
ஜேம்ஸ்பாண்ட் போல செல்போன் கவருக்குள் அந்த வைரத்தை மறைத்து வைக்கப்போகிறார் என ஆர்வமுடன் கதாசிரியர் கவனித்தார். ஆனால்..
அம்மணியோ... பொறுமையாக செல்போன் கவரைப் பிரித்து விட்டு வைரத்தோட்டின் கூர்மையான பின்புறத்தை சிம்கார்ட்டை குத்தி எடுக்கும் கருவியாக்கி சிம்கார்டை சவகாசமாக வெளியே எடுத்தார்.
எத்தனை கோடி நரம்புகள் மூளையில் வைத்தாய் எங்கள் இறைவா !!
#தோடுடையசெவியாள்
நேரத்தைக் காரணம் சொல்லி கவிதைகளையோ, கவிதை நூல்களையோ வாசிக்க மாட்டேன் என்றெல்லாம் கங்கணம் கட்டி திரியவில்லை.
அப்படிச் சமீபத்தில் பட்ட கவிதை ஒன்று அமெரிக்காவில் இருந்து எழுதும் கவிஞர் பிரதீபா பிரேம் எழுதியது
"விரித்த கைகளோடு
விசும்பினை நோக்கி
இயற்கையிடம்
முறையிட்டுக் கொண்டிருக்கும்
மரக் கூட்டங்களை..."
எனும் அந்தக் கவிதை 'மரங்கள்' குறித்து கவிக்கோ அப்துல் ரகுமான் "நேயர் விருப்பம்" தொகுப்பில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தியது. அந்தக் கவிதை
"மரங்களே! பூமியின்
வரங்களே!
விதை வாமனனின்
விசுவ ரூபங்களே!
நீங்கள்
ஓவியமாகவே
உருவெடுத்தத் தூரிகைகள்.."
இப்படி ஒரு கவிதையோ அல்லது ஒரு கவிதையின் வரி கூட ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. அப்படி வரும் நினைவு என்பது கூட தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது.