Sunday, September 1, 2024

ஓய்வு தந்த பாடம்

வாசிப்பதில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தபோது தோன்றியது;

பொதுவாக 'தீவிர இலக்கிய வாசிப்பு' என்பது அதிக உழைப்பைக் கோரும் ஒன்று என்பது  பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், வாசிப்பு என்பதே படிப்பவர்களின் மெனக்கடலை கொஞ்சமேனும்  கோரும் ஒன்றாக இருக்கிறது (அதை உழைப்பு எனச் சொல்லத் தேவையில்லை).



ஆனால், மற்ற காட்சி ஊடகங்கள் அப்படியில்லை. அது  காதல், கவர்ச்சி, நகைச்சுவை என அனைத்து ரசங்களையும்  தூண்டி பார்ப்பவர்களை உள்ளே எளிதாக  இழுத்துக்கொள்கிறது. அதிக தனிக்கவனம் தேவையில்லாத எளிமையான ஒன்றும்கூட. 

பொழுது நன்றாக போகும். உங்களைச் சுற்றி இருக்கும் பல இலட்சம் பேர் அதைத் தான் செய்துகொண்டிருப்பார்கள். தேவைப்பட்டால் அதுபற்றி சிலாகித்து விவாதிக்கவும் தயாராக இருப்பார்கள். அதனால்தான் அது வெகுஜன ஊடகம். (வாசிப்பதின் சாதக பாதகங்கள் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்).

வாசிப்பதில் இருந்து விலகுவது என்பது எளிதாக இருந்தாலும், மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் அதற்குள் நுழைவது என்பது கொஞ்சம் சிரமம்தான். அதிலும் குறிப்பாக, வாசிப்புக்கு என மற்ற ஊடகங்கள் போல புற அழுத்தங்கள் எதுவும் பெரிதாக இல்லை. விளம்பரங்கள் கிடையாது என்பதால் அதில் மீண்டும் நுழைவதற்கு நம்மிடம் வேறு பல வலிமையான காரணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

அது நீண்ட நாள் நுகர்வின் வழியாக வந்த வாசிப்பின் சுவையாக இருக்கலாம். இல்லை நானெல்லாம் சராசரிக்கு சற்று மேலே எனும் கர்வமாக கூட இருக்கலாம். :)

Saturday, August 17, 2024

வனநாயகன் குறித்து-36 (அழிந்து வரும் போர்னியா காடுகளும் சூழலியலும்)

வனநாயகன்(மலேசிய நாட்கள்)  நாவல் குறித்து சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபால் அவர்களுடைய வாசக அனுபவம் கீழே.  சமகாலத்தில் சூழலியலில் தனது எழுத்தோடு பயணிக்கும் சதீஸ் அவர்களுக்கு நன்றி !

//

தோழர் திரு.ஆரூர் பாஸ்கர் அவர்களின் "வனநாயகன்" வாசித்தேன். மலேசியாவை கதைக்களமாக கொண்ட ஒரு அற்புதமான நாவல். முற்றிலும் புதுமையான கதை. யாரும் எழுதாத மென்பொருள் நிறுவனத்தில் நிகழும் சிக்கலைகளை மையமாக வைத்து, புதியதொரு களத்தில் விறுவிறுப்புடன் கூடிய நாவலை படைத்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அதையும் தாண்டி, அழிந்து வரும் போர்னியா காடுகளை இந்த கதைக்குள் கொண்டுவந்த போது, அவருடைய சிந்தனை ஆச்சரியப்படுத்தியது. 


கதையின் ஊடாக, தன்னால் இயன்றவரை மலேசியாவை பற்றிய தகவல்களை கொட்டிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார். மிகவும் நுட்பமாக மனிதர்களை அடையாளப்படுத்துகிறார். காட்சி நடக்கும் இடங்களை அப்படியே கண் முன்னால் நிறுத்துகிறார். இந்த நாவலுக்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. 

கதையில் விழும் முடிச்சுகள், அதன் பின்னால் இருக்கும் கதைகள், அதன் வழியே அவர் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம், எதிர்பாராத திருப்பம் என வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான நூல் வனநாயகன். கார்ப்பரேட் நிறுவனங்களில் எதுவும் நாணயமானது இல்லை என, மோசடிப் பேர்வழிகள் எனச் சொல்லும் இடத்தை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. 

மென்பொருள் ஊழியர்கள், அவர்களுக்கிடையே தோழமை, பகை, காதல் என எல்லாவற்றையும் கடந்து, பத்திரிக்கையாளர், காவலர், மருத்துவர், டாக்ஸி ஓட்டுநர் என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தேவைக்கேற்ப அழகாக வடிவமைத்திருக்கிறார். கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் எழுத்து நடையை நான் மிகவும் ரசித்தேன். 

கதையின் நாயகனாக வரும் சுதாகர், எந்த தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருக்கிறார். இப்படி ஒரு நாயகனை சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவிலாவது பார்த்ததுண்டா ? எனக்கு சுதாகரை மிகவும் பிடித்துப்போனது. கதையின் போக்கில் சில இடங்களில் நான் சுதாகராக உணர்ந்தேன்.


தோழர் பாஸ்கர் அவர்களால், ஒரு முழு சூழலியல் நாவலை எழுத முடியும் என நான் நம்புகிறேன். அவர் இதில் தொட்ட விஷயத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல நூறு கதைகள் பிறக்கும். அவரால் நிச்சயம் அது முடியும். அவர் மேலும் பல படைப்புகளை உருவாக்க மனதார வாழ்த்துகிறேன்.

//

Orgninal Link:

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Tuesday, July 30, 2024

வாணி - தமிழ் எழுத்துப் பிழை திருத்தி

தமிழ் மொழியில் சந்திப்பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திருத்தும் தளம்/செயலி வாணி  தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. இது குறித்து அறியாதவர்களுக்காக..

இதை ‘நீச்சல்காரன்’ எனும் எஸ்.இராஜாராமன் உருவாக்கி,வடிவமைத்து நிர்வகித்து வருகிறார்.  மதுரையைச் சேர்ந்த மென்பொறியாளரான அவர் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அவர் தமிழக முதல்வரின் கணினித்தமிழ் விருது, கனடாவின் இலக்கியத்தோட்டம் விருது போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். 


தமிழ்மொழியின் முக்கிய எழுத்துப்பிழைத் திருத்தியாக செயல்படும் அதன் இணையதள முகவரி

https://vaanieditor.com/


Sunday, June 23, 2024

2024 யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள்

இந்திய மொழிகளில் இலக்கியத்தின் உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாதமியின் தமிழ்மொழிக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல்கள்:

நூல்

நூலாசிரியர்

யுவ புரஸ்கார்

விஷ்ணு வேந்தர்

லோகேஷ் ரகுராமன்

பால சாகித்ய புரஸ்கார் விருது


தன்வியின் பிறந்தநாள்

யூமா வாசுகி




Sunday, June 2, 2024

முழி பெயர்ப்பு

தமிழ்நாட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் அது.  அவர்கள் விழா ஒன்றுக்கு  அச்சடித்த ஓர் அழைப்பிதழை மொழிபெயர்க்கச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

அங்கே வேலைபார்க்கும் சிலர்  அதை அதற்கு முன் இயந்திர  மொழி(முழி) பெயர்த்து இருந்தார்கள். சகிக்கவில்லை.

உதாரணமாக ஒன்றைத் தருகிறேன்.

"We Cordially Invite You to Visit Us" -  என்பதை "அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்வையிட".

இது எப்படி இருக்கு ??


நன்றி- படம் இணையம்.



Monday, May 20, 2024

வனநாயகன் குறித்து-35 (It's actually a thriller story with lot of twists)

வனநாயகன் குறித்து  நண்பர் Saravanan Gnanasekaran  மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.

//

Have read a very good Tamizh Novel after a long time written by Baskar Anna. Its a narration by a character called 'Sudhankan' about his experience in Malaysia back in 2002-2003. It's actually a thriller story with lot of twists. It covers a wide spectrum right from love of a common man, different kind of people from different cultures and personalities, happenings in IT industry, office politics, betrayal of people whom you trust etc. The story happens in Malaysia and author did his best to describe about the places which would come as part of the story. I felt like reading my favorite author Mr. S. Ra. It was like the author sitting next to you and telling the story. I was amazed to know that this novel was based on a true story.
Vazhlthukkal Baskar Anna.. It was one of the best novels I have read.

//




Sunday, May 19, 2024

தட்டையான மொழிபெயர்ப்பு

 நம்மூர் ஆட்கள் Google translation ஐ வைத்து மற்ற மொழி நூல்களை  மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படியெல்லாம் குருட்டாம்போக்கில் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பலகீனமான ஒரு துறையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது மேம்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசிப்பனுபவத்தோடு, நமது பண்பாட்டுக் கூறுகளோடு,  நுட்பமான இலக்கிய நாட்டமும் இருக்கும் போது ஒரு படைப்பு மேம்படுகிறது. 

இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு செய்வது பயனற்ற ஒன்று.

உதாரணமாக 'அவனுக்கு குறிஞ்சி பூத்தது'  என்ற ஒரு வரி வருகிறது இதை எப்படி  ஒரு வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பது ? சொல்லுங்கள்.

அடுத்து, 'அவள் காய்சிய பால் போன்றவள்' எனும் வரியின் உள்ளர்த்தம் தமிழ் பண்பாட்டு தெரிந்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.

ஆனால், அதை தட்டையாக மொழிபெயர்த்து விட்டால்? அதன் உட்பொருள் மறைந்துவிடுமே ? என்ன செய்வது...

அடுத்து 'மூத்த மருமகனான அவனுக்கு மாமியார் வீட்டில் எப்போதும் பூரண கும்ப மரியாதைதான்

இதையெல்லாம்,  தமிழில் இருந்து ஒரு இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்துவிடுமா என்ன ? செயற்கை நுண்ணறிவு மூழமாக இனி செய்யலாம்.  ஆனால், அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.