Sunday, January 21, 2024

வனநாயகன் குறித்து-31 (இலக்கிய சுவையும், அறிவின் தெளிவும் பெற்றேன்)

ஒரு படைப்பாளிக்கு அதிக மகிழ்ச்சி தரும் விசயம் என ஒன்றிருந்தால் அது பாராட்டாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அது முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து வரும்போது இன்னமும் சிறப்பானதாகிறது.

அமெரிக்கா வந்த ஒரு அன்பர் வழியாக மலேசியா பயணப்பட்ட எனது வனநாயகன்(மலேசிய நாட்கள்) நாவல் ஒரு சிராம்பன் நண்பரை நெகிழச் செய்திருப்பது மகிழ்ச்சி (படம்). 


சிரம்பான் (Seremban) நகரம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கிறது. வனநாயகன் வந்ததிலிருந்தே அது குறித்து பல நல்ல அபிப்பிராயங்களை தொடர்ந்து  கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். வனநாயகன் மலேசியர்களுக்கானது மட்டும் இல்லை. தமிழர்களுக்கானது. வெளியீடு- கிழக்கு பதிப்பகம்.



Sunday, January 14, 2024

கரைந்த நிழல்கள் - வாசிக்கும் போது

திரைப்பட தயாரிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்ட பின் சென்னையில்  இயங்கிய பெரிய ஸ்டுடியோக்கள் எப்படி நசிந்தன என்பதை மையப்படுத்தியே ஒரு சுவாரஸ்யமான படம் எடுக்கலாம் போல இருக்கிறது. திரைக் கதை அமைப்பதும் அவர்களுக்கு எளிதுதான். 

ஏனென்றால், இது அவர்களுடைய சொந்த கதை. தேவையில்லாமல், யாருடைய நாவலில் இருந்து எதை உருவலாம். மொழி புரியாத எந்தப் படத்தை  விடிய விடிய கண்விழித்து  பார்த்து அதில் எந்தக் காட்சியைச் சுடலாம் என பாயை பிராண்டி கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அது மட்டுமல்லாமல், அந்த நாட்களில் சென்னையில் 10-15 ஸ்டியோக்கள் இயங்கின. தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தி படங்களும் இங்கே தயாரானது. அதனால், பல மாநில பார்வையாளர்களைக் குறி வைத்து  போட்ட பணத்தை எடுத்து விடலாம்.

இந்த யோசனையெல்லாம், அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்' வாசிக்கும் போது தோன்றியது.  1960-களில் ஜெமினி ஸ்டுடியாவில் வேலை செய்த அவர் இந்த நாவலின் வழியாக திரைத்துறையின் எதார்த்தத்தைச் சொல்லி இருக்கிறார்.

Thursday, January 11, 2024

வனநாயகன் குறித்து-30 (அன்பர்கள் தைரியமாக வாங்கலாம்)

நட்புவட்டத்தில் இருக்கும் மலேசிய முகநூல் அன்பர் மங்கள கெளரி அவர்களுடைய வாழ்த்து.

 


Saturday, January 6, 2024

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் திருவாரூரிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணம்தான் என்றாலும் ஜனவரியில் (2023) தான் போகும் வாய்ப்பு கிடைத்தது. அது பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கமாக காத்தாடும் அந்தக் கோயிலில் அன்று எங்கும் மனித தலைகள் என்றார்கள்.



இந்தக் கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராகவும் இருந்திருக்கிறது.

இதுபோல கலையம்சத்தைக் கல்லிலும், மண்ணிலும், உலோகங்களிலும் கண்ட மனிதர்கள் மறைந்தாலும் அதற்கு பிறகு வரும் தலைமுறைகள் அதை வியந்து போற்றி பாதுகாப்பது சிறப்பு.

அந்த விதத்தில் காலம் கடந்து நிற்கும் அழகிய கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் துறையின் வசம் இருப்பதும் அதைக் கட்டுவித்த இராஜேந்திர சோழன் நினைவு கொள்ளப்படுவதும் சிறப்பு.