Thursday, January 1, 2026

சொற்கள் தோற்குமிடம்

சமயங்களில்

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள

இடைவெளி குறைவாக 

மிக நெருக்கமாக இருந்து விடுகிறது.


தீர விசாரிப்பதில்

அதைக் களைய முற்படலாம்

ஆனால் அதை முழுதாக அரிய

முடியாது.


சொற்கள் தோற்குமிடம் மௌனம் ஆள்கிறது

புரியாத உண்மைகளை அதுவே சுமக்கிறது.