Wednesday, June 10, 2026

தினமலர் சிறுகதை போட்டி -2026 (மொத்தப் பரிசுத்தொகை 1 இலட்சம்)

 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி -2026

உங்கள் கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் சிறகுகள் தரும் சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். 

மொத்தப் பரிசுத்தொகை ரூ. 1,00,000, மொத்தப் பரிசுகள் 14, போட்டிக் கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 30 ஆம் தேதி
பிற விவரங்கள் கீழே..




Wednesday, June 3, 2026

திருக்கார்த்தியல் விருதுகள் 2026

திருக்கார்த்தியல் வாசக நண்பர்கள் அறிவித்திருக்கும் பரிசுப்போட்டி.

திருக்கார்த்தியல் விருதுகள் 2026

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 30,000
படைப்பாளி 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
2025 & 2026 ஆகிய ஆண்டுகளில் வெளியான நூல்களின் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.
நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று பிரிவுகளில் நூல்களை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்கு ரூபாய் 10,000 பரிசு
பிற விவரங்களை இணைப்பில் காண்க.


. இதன் உள்ளடக்கத்திற்கு நான் பொறுப்பல்ல. பகிர்வதற்காக மட்டுமே முன்னனுப்பப்படுகிறது

இராம.செ. சுப்பையா நினைவு - நாவல் போட்டி 2026

இராம.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்தும் நாவல் போட்டி - 2026, சிறந்த 2 நாவல்களுக்குப் பரிசு. மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 50,000.  உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31.

மேலதிக விவரங்கள் கீழே.





Sunday, May 31, 2026

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2026 - முடிவுகள்

 அந்திமழை இதழ் ஆண்டுதோறும் 'இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி'யை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான (2026) போட்டி 40 வயதுக்குட்பட்ட இளையோருக்காக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கீழே..



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !. இதில் நண்பர் எழுத்தாளர் அரவிந்தின் ‘Function’ சிறுகதை  இந்த இளையோர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.


Saturday, May 30, 2026

தோடுடைய செவியாள்

இரயிலில் எதிரே அமர்ந்திருந்த பெண் தனது காதில் அணிந்திருந்த வைரக் கம்மலைக் கழட்டினார்.  பின் தனது செல்போன் கவரைப் பிரிக்கத் தொடங்கினார்.



ஜேம்ஸ்பாண்ட் போல செல்போன் கவருக்குள் அந்த வைரத்தை மறைத்து வைக்கப்போகிறார் என ஆர்வமுடன் கதாசிரியர் கவனித்தார். ஆனால்..

அம்மணியோ... பொறுமையாக செல்போன் கவரைப் பிரித்து விட்டு வைரத்தோட்டின் கூர்மையான பின்புறத்தை சிம்கார்ட்டை குத்தி எடுக்கும் கருவியாக்கி சிம்கார்டை சவகாசமாக வெளியே எடுத்தார். 

எத்தனை கோடி நரம்புகள் மூளையில் வைத்தாய் எங்கள் இறைவா !!

#தோடுடையசெவியாள்


Monday, May 25, 2026

கங்கணம் கட்டி திரியவில்லை

நேரத்தைக் காரணம் சொல்லி கவிதைகளையோ, கவிதை நூல்களையோ வாசிக்க மாட்டேன் என்றெல்லாம் கங்கணம் கட்டி திரியவில்லை.


கவிதைகளைத் தேடித் தேடி படிப்பதில்லையே தவிர சிறப்பான கவிதைகள் கண்ணில் பட்டால்.. படித்து, பாராட்ட தவறுவதில்லை.

அப்படிச் சமீபத்தில் பட்ட கவிதை ஒன்று அமெரிக்காவில் இருந்து எழுதும் கவிஞர் பிரதீபா பிரேம் எழுதியது

"விரித்த கைகளோடு

விசும்பினை நோக்கி

இயற்கையிடம்

முறையிட்டுக் கொண்டிருக்கும்

மரக் கூட்டங்களை..."

எனும் அந்தக் கவிதை 'மரங்கள்' குறித்து கவிக்கோ அப்துல் ரகுமான்  "நேயர் விருப்பம்" தொகுப்பில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தியது. அந்தக் கவிதை

"மரங்களே! பூமியின்

வரங்களே!

விதை வாமனனின்

விசுவ ரூபங்களே!

நீங்கள் 

ஓவியமாகவே

உருவெடுத்தத் தூரிகைகள்.."

இப்படி ஒரு கவிதையோ அல்லது ஒரு கவிதையின் வரி கூட ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. அப்படி வரும் நினைவு என்பது கூட தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது.

Saturday, May 2, 2026

“சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை ?

சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை என்று பதின்வயதிலேயே சிந்தித்தாக All Our Loves: Journeys with Polyamory in India  எனும் ஆங்கில நூலின் ஆசிரியர் Arundhati Ghosh எழுதியிருக்கிறாராம். இதை அம்ருதா இதழில்  பதிவு செய்திருப்பவர் ஜெ.தீபலட்சுமி.






வாய்ப்பிருந்தால் வாசித்துப் பார்க்கவேண்டும்.



Thursday, March 26, 2026

Celebrating 10 Years of VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition)

 A decade ago, a story crossed borders and found its place in the hearts of tamil readers.



வனநாயகன்: மலேசிய நாட்கள் / VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition) is more than a novel — it is a journey of identity, struggle, and belonging.



Wednesday, March 25, 2026

10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)

சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.

இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம்.  அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.


அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில்  நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".

சதீஸின் இணைப்பு கீழே..

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Sunday, March 1, 2026

AI (செயற்கை நுண்ணறிவு) - எழுத்தாளர் சுஜாதா பார்வையில்

எழுத்தாளர் சுஜாதா பார்வையில் ஏஐ தொழில்நுட்பம். 

சமீபத்தில் சிலிக்கான் சில்லுகளுக்குள் ஒரு குட்டி மூளை குடியேறியிருக்கிறது;  ஆமாம் நண்பர்களே அதற்குப் பெயர் Artificial Intelligence இல்லை செயற்கை நுண்ணறிவு. நீங்கள் ஒரு கவிதை கேட்டால், கம்பனையும் ஷெல்லியையும் கலந்து ஒரு நொடியில் துப்பிவிட்டு அடுத்த வேலைக்குப் போகிறது.

"கணேஷ்,  ஏஐ-க்கு இதயம் இருக்கா?" என்று கேட்டால், "லாஜிக் தான் இதோட இதயம் வசந்த்" என்பான் கணேஷ். ஆமாம்,  தகவல்கள் தான் அதன் ரத்தம்; அல்காரிதம்கள் தான் அதன் நரம்பு மண்டலம்.

உங்கள் ரசனையை, உங்களை விட ஒரு மென்பொருள் துல்லியமாகத் தீர்மானிப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது மனிதனை விஞ்சுவதல்ல, மனிதனின் நீட்சி; ஒரு டிஜிட்டல் ஊன்றுகோல் என்பேன்.

நீண்ட அலகு நாரை

நீரை கொத்தினாலும் நீங்காத நிலா...” இது அமுத பாரதி எழுதிய ஹைக்கூ. இதுபோன்ற பல ஆயிரம் கவிதைகளை ஏஐ நொடியில் பிரசவிக்கும். ஆனாலும், மனிதர்கள் உணர்ந்து ரசனையாக எழுதியதை வாசிக்கையில் வரும் மென்புன்னகை அங்கே சுத்தமாக மிஸ்ஸிங்.

ஏஐ-யைப் பொறுத்தவரை கவிதை என்பது வெறும் நிகழ்தகவு-Probability. அதற்கு நிலா தெரியாது, நிலவின் அலைநீளம் (Wavelength) தான் தெரியும். நாரை தெரியாது, 'Bird' என்கிற டேக் (Tag) தான் தெரியும். அது வார்த்தைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, இலக்கணத்தை ஐஸ் கட்டியாகத் தூவி தரும் ஜூஸில் சுவை இருக்குமா ?என்பதை வாசிக்கும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.



இதனுடன், துக்கடாவாக ஏஐ-யால் மேம்படுத்தப்பட்ட என்னுடைய வாலிப கால படத்தையும் இணைத்திருக்கிறேன், கண்டு இரசியுங்கள்.

நன்றி-கூகுள் ஜெமினி.

Monday, February 9, 2026

செல்வத்தை அனுபவித்தல்

"வறுமையில் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு அதிகமாக அவமதிக்கப்பட்டீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் செல்வத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் ரசிப்பீர்கள்". ராபர்ட் குயிலன் 

“The more you were snubbed while poor, the more you enjoy displaying your wealth.”

— ராபர்ட் க்வில்லன்

இந்த ஒரு வரி, மனித மனதின் ஆழமான காயங்களை மிக எளிமையாக வெளிச்சம் போடுகிறது. வறுமை என்பது வெறும் பணமின்மை அல்ல; அது பல நேரங்களில் மதிப்பின்மை, அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றின் தொகுப்பாக மனித உள்ளத்தில் பதிந்து விடுகிறது. 

ஏழ்மையில் இருந்த காலங்களில் ஒருவர் சந்தித்த அலட்சிய பார்வைகள், மரியாதையற்ற நடத்தை, “நீ யார்?” என்ற மௌனக் கேள்விகள் — இவை அனைத்தும் மனதில் மறையாத சுவடுகளாகத் தங்கி விடுகின்றன.

அந்த மனிதன் வாழ்க்கையில் உயர்ந்து, செல்வம் சேர்க்கும்போது, அந்த செல்வம் வெறும் வசதிக்காக மட்டும் இல்லை. அது ஒரு பதில். முன்பு தன்னைப் பொருட்படுத்தாத உலகிற்கு, “இப்போது என்னைப் பாருங்கள்” என்று சொல்லும் ஒரு மௌனக் குரல். விலை உயர்ந்த உடைகள், ஆடம்பரமான வீடுகள், பிரமாண்டமான விழாக்கள் — இவை எல்லாம் சமூகத்திற்கு காட்டும் காட்சிகள் மட்டுமல்ல; மனதுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குறைபாட்டை மறைக்கும் கவசங்களும் ஆகும்.


இங்கு செல்வத்தின் காட்சிப்படுத்தல் பெருமைக்காக மட்டும் அல்ல. அது ஒரு வகையில் சுய உறுதிப்பாடு (self-validation). “நான் யாரோ ஆகிவிட்டேன்” என்று தானே தன்னை நம்ப வைக்கும் முயற்சி. வறுமையில் இருந்தபோது கிடைக்காத மரியாதையை, இப்போது பணம் வாங்கித் தரும் என்ற நம்பிக்கை. அதனால் தான், சிலருக்கு செல்வம் வந்த பிறகும் அமைதி வராது; காட்ட வேண்டிய அவசரம் மட்டும் அதிகரிக்கும்.

ஆனால் இந்த மேற்கோள் நம்மை ஒரு கேள்வியையும் கேட்க வைக்கிறது:
நாம் செல்வத்தை அனுபவிக்கிறோமா, அல்லது வறுமையின் நினைவுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமா ?

Wednesday, February 4, 2026

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி - 2026

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி - 2026,  இறுதிநாள் ஏப்ரல்- 02- 2026



Sunday, February 1, 2026

Thursday, January 1, 2026

சொற்கள் தோற்குமிடம்

சமயங்களில்

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள

இடைவெளி குறைவாக 

மிக நெருக்கமாக இருந்து விடுகிறது.


தீர விசாரிப்பதில்

அதைக் களைய முற்படலாம்

ஆனால் அதை முழுதாக அரிய

முடியாது.


சொற்கள் தோற்குமிடம் மௌனம் ஆள்கிறது

புரியாத உண்மைகளை அதுவே சுமக்கிறது.