வனநாயகன் குறித்து நண்பர் Saravanan Gnanasekaran மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.
//
வனநாயகன் குறித்து நண்பர் Saravanan Gnanasekaran மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.
//
நம்மூர் ஆட்கள் Google translation ஐ வைத்து மற்ற மொழி நூல்களை மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படியெல்லாம் குருட்டாம்போக்கில் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பலகீனமான ஒரு துறையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது மேம்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசிப்பனுபவத்தோடு, நமது பண்பாட்டுக் கூறுகளோடு, நுட்பமான இலக்கிய நாட்டமும் இருக்கும் போது ஒரு படைப்பு மேம்படுகிறது.
இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு செய்வது பயனற்ற ஒன்று.
உதாரணமாக 'அவனுக்கு குறிஞ்சி பூத்தது' என்ற ஒரு வரி வருகிறது இதை எப்படி ஒரு வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பது ? சொல்லுங்கள்.
அடுத்து, 'அவள் காய்சிய பால் போன்றவள்' எனும் வரியின் உள்ளர்த்தம் தமிழ் பண்பாட்டு தெரிந்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.
ஆனால், அதை தட்டையாக மொழிபெயர்த்து விட்டால்? அதன் உட்பொருள் மறைந்துவிடுமே ? என்ன செய்வது...
அடுத்து 'மூத்த மருமகனான அவனுக்கு மாமியார் வீட்டில் எப்போதும் பூரண கும்ப மரியாதைதான்'
இதையெல்லாம், தமிழில் இருந்து ஒரு இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்துவிடுமா என்ன ? செயற்கை நுண்ணறிவு மூழமாக இனி செய்யலாம். ஆனால், அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்
'இப்ப உங்க வனநாயகன் வால்மார்ட்டில்(Walmart) கிடைக்குதே...! ' என ஒரு அமெரிக்க நண்பி உள்பெட்டியில் வந்து அதிசயித்தார். 'அதிசயிக்கும் நீங்கள் 8-வது அதிசயம்' என அறுக்காமல் விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டேன்.
விசயம் இதுதான். அமெரிக்க வாசகர்கள் படித்து இன்புறும் வகையில் யாரோ வனநாயகன் (மலேசிய நாட்கள்) நாவலை வால்மார்ட் தளத்தில் $22 டாலருக்கு விற்பனை செய்கிறார்களாம்.
யாரும் அவ்வளவு கொடுத்து சிரமப்படவேண்டியதில்லை. அதில் பாதி விலைக்கே அமெரிக்காவின் எந்த மூலைக்கும் Media Mail-இல் நானே அனுப்பிவைப்பேனே.. எனச் சொல்லி அவரை அமைதிப்படுத்தினேன்.
வனநாயகன் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்பும் இப்படித் தொடர்ந்து வாசிக்கப்படுவது மகிழ்ச்சி.
மனத்தளவில் சோர்ந்து போகும்போதும், தளர்வடையும் போதும் அதுவே எனக்கு உற்சாகம் தரும் டானிக்.
சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாப்ட் கோ-பைலட்(Microsoft Copilot) போன்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-களுக்கு போட்டியாக 'பிர்ப்லக்ஸிட்டி '(Perplexity.ai) வந்திருக்கிறது. வழக்கம் போல், 'யார் ஆரூர் பாஸ்கர் ?' என்ற கேள்வியைக் கேட்டபோது perplexity அளித்த பதில் நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது.
கூடவே, எதை ஆதாரமாகக் கொண்டு நமக்கு பதில் தருகிறது என்பதற்கு source link-ஐயும் தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளைத் தொடர்ச்சியாக கேட்கலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதனால் நாம் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது.
சாட்ஜிபிடி-யின் செயல்திறனில் திருப்தி இல்லாதவர்கள் perplexity.ai -ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே... பிர்ப்லக்ஸிட்டி (perplexity, n) என்பதைத் தமிழில் குழப்பம் அல்லது சிக்கலான, கடினமான சூழல் என பொருள் கொள்ளலாம்.
தற்செயலாக அமேசான் தளத்தில் குருபாரதி என்ற வாசகர் வனநாயகன் பற்றி எழுதிய இந்தக் குறிப்பு கண்ணில் பட்டது. கூடவே 5 (5 star rating) நட்சத்திரக் குறியிட்டு இருப்பதையும் பார்த்தேன்.
//
எடுத்த புத்தகத்தை என்னால் மேசை மேல் வைக்க முடியாத அளவு விறுவிறுப்பு, தொடர்ந்து 3 நாட்களில் முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.
ஆசிரியருக்கு நன்றி !
//
1980-களின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப்பழமையான Parryware ( பேரிவேர்) நிறுவனம் பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். அதை முருகப்பா நிறுவனம் ஏற்று நடத்த கோரிக்கை வைக்கிறார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அதை ஏற்றுக்கொண்டது முருகப்பா நிறுவனம்.
அதன் நிறுவனத் தலைவர் முதல் நாள் Parryware அலுவலகத்துக்கு தான் வழக்கமாக பயன்படுத்தும் பழைய காரில் போய் இறங்குகிறார். அங்கு போர்டிகோவில் முன்னாள் முதலாளி பயன்படுத்தியதாகச் சொல்லி ஒரு மெர்சிடிஸ் பென்ஸைக் காட்டுகிறார்கள். அது எனக்கு இனி தேவையில்லை என ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன் காரில் இருந்து இறங்கி நடக்கிறார். அப்போது அவருடைய கைப்பையை வாங்கிக் கொள்ள ஒரு வேலையாள் பவ்யமாக 'ஐயா..' கை நீட்டுகிறார். அவரோ 'என்னுடைய வேலையை நானே செய்வதுதான் சரி..' என அவரை ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன் நடந்து லாபிக்குள் நுழைகிறார்.
அங்கே வலது, இடது என இரண்டு லிஃப்டுகள் இருக்கின்றன. வலது புறம் உள்ள லிஃப்டோ காலியாக இருந்தது. இடது புற லிப்ஃடில் ஏறவோ தொழிலாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். புதிய தலைவர் 'என்ன காரணம் ?.' என வினவ அங்குள்ள அதிகாரிகள் 'இது உயர் அதிகாரிகளுக்கென பிரத்தியோகமானது...' என்கிறார்கள்.
சரி என்ற புதிய தலைவர், வலதுபுற லிஃப்டை ஒதுக்கிவிட்டு தொழிலாளர்கள் வரிசையில் போய் கடைசியில் இணைந்து நிற்கிறார். அதிகாரிகளோ பதறிக்கொண்டு ஓடிவந்து இன்னோன்றில் ஏறச் சொல்கிறார்கள். அவரோ 'தாராளமாக நான் வருகிறேன். ஆனால், மற்ற தொழிலாளர்களும் என்னோடு சேர்ந்து அதில் வருதாக இருந்தால்... 'எனச் சொல்ல அங்கிருந்த தொழிளார்கள் அடைந்த ஆனந்தத்தைத் சொல்லி தெரியவேண்டுமா என்ன!?
அன்று பிறந்தது பேரிவேர்(Parryware) நிறுவனத்துக்கு விடிவு. அதுவரை பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனம் பின் அடைந்ததெல்லாம் வெற்றிமுகம் என்பது வரலாறு. இன்று அதன் ஆண்டு வருமானம் 35,000 கோடி ரூபாய்கள். பேரிவேரின் தலையெழுத்தை மாற்றிய அந்தத் தலைவர் எம்.வி.சுப்பையா. அவர் 2012-இல் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அளித்து கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இது ஏதோ ஒரு திரைப்படத்தின் அறிமுகக் காட்சி போல தோன்றினாலும் ஒன்றுக்கும் உதவாத நடைமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு மாத்தி யோசிப்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி மாத்தி யோசிக்க சமயங்களில் வெளியில் இருந்தும் இப்படியான ஆட்கள் வர வேண்டியிருக்கிறது.