Showing posts with label #vananayakan. Show all posts
Showing posts with label #vananayakan. Show all posts

Thursday, March 26, 2026

Celebrating 10 Years of VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition)

 A decade ago, a story crossed borders and found its place in the hearts of tamil readers.



வனநாயகன்: மலேசிய நாட்கள் / VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition) is more than a novel — it is a journey of identity, struggle, and belonging.



Wednesday, March 25, 2026

10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)

சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.

இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம்.  அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.


அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில்  நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".

சதீஸின் இணைப்பு கீழே..

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Saturday, August 17, 2024

வனநாயகன் குறித்து-36 (அழிந்து வரும் போர்னியா காடுகளும் சூழலியலும்)

வனநாயகன்(மலேசிய நாட்கள்)  நாவல் குறித்து சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபால் அவர்களுடைய வாசக அனுபவம் கீழே.  சமகாலத்தில் சூழலியலில் தனது எழுத்தோடு பயணிக்கும் சதீஸ் அவர்களுக்கு நன்றி !

//

தோழர் திரு.ஆரூர் பாஸ்கர் அவர்களின் "வனநாயகன்" வாசித்தேன். மலேசியாவை கதைக்களமாக கொண்ட ஒரு அற்புதமான நாவல். முற்றிலும் புதுமையான கதை. யாரும் எழுதாத மென்பொருள் நிறுவனத்தில் நிகழும் சிக்கலைகளை மையமாக வைத்து, புதியதொரு களத்தில் விறுவிறுப்புடன் கூடிய நாவலை படைத்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அதையும் தாண்டி, அழிந்து வரும் போர்னியா காடுகளை இந்த கதைக்குள் கொண்டுவந்த போது, அவருடைய சிந்தனை ஆச்சரியப்படுத்தியது. 


கதையின் ஊடாக, தன்னால் இயன்றவரை மலேசியாவை பற்றிய தகவல்களை கொட்டிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார். மிகவும் நுட்பமாக மனிதர்களை அடையாளப்படுத்துகிறார். காட்சி நடக்கும் இடங்களை அப்படியே கண் முன்னால் நிறுத்துகிறார். இந்த நாவலுக்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. 

கதையில் விழும் முடிச்சுகள், அதன் பின்னால் இருக்கும் கதைகள், அதன் வழியே அவர் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம், எதிர்பாராத திருப்பம் என வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான நூல் வனநாயகன். கார்ப்பரேட் நிறுவனங்களில் எதுவும் நாணயமானது இல்லை என, மோசடிப் பேர்வழிகள் எனச் சொல்லும் இடத்தை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. 

மென்பொருள் ஊழியர்கள், அவர்களுக்கிடையே தோழமை, பகை, காதல் என எல்லாவற்றையும் கடந்து, பத்திரிக்கையாளர், காவலர், மருத்துவர், டாக்ஸி ஓட்டுநர் என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தேவைக்கேற்ப அழகாக வடிவமைத்திருக்கிறார். கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் எழுத்து நடையை நான் மிகவும் ரசித்தேன். 

கதையின் நாயகனாக வரும் சுதாகர், எந்த தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருக்கிறார். இப்படி ஒரு நாயகனை சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவிலாவது பார்த்ததுண்டா ? எனக்கு சுதாகரை மிகவும் பிடித்துப்போனது. கதையின் போக்கில் சில இடங்களில் நான் சுதாகராக உணர்ந்தேன்.


தோழர் பாஸ்கர் அவர்களால், ஒரு முழு சூழலியல் நாவலை எழுத முடியும் என நான் நம்புகிறேன். அவர் இதில் தொட்ட விஷயத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல நூறு கதைகள் பிறக்கும். அவரால் நிச்சயம் அது முடியும். அவர் மேலும் பல படைப்புகளை உருவாக்க மனதார வாழ்த்துகிறேன்.

//

Orgninal Link:

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Monday, May 20, 2024

வனநாயகன் குறித்து-35 (It's actually a thriller story with lot of twists)

வனநாயகன் குறித்து  நண்பர் Saravanan Gnanasekaran  மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.

//

Have read a very good Tamizh Novel after a long time written by Baskar Anna. Its a narration by a character called 'Sudhankan' about his experience in Malaysia back in 2002-2003. It's actually a thriller story with lot of twists. It covers a wide spectrum right from love of a common man, different kind of people from different cultures and personalities, happenings in IT industry, office politics, betrayal of people whom you trust etc. The story happens in Malaysia and author did his best to describe about the places which would come as part of the story. I felt like reading my favorite author Mr. S. Ra. It was like the author sitting next to you and telling the story. I was amazed to know that this novel was based on a true story.
Vazhlthukkal Baskar Anna.. It was one of the best novels I have read.

//




Friday, May 3, 2024

வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்

வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்

'இப்ப உங்க வனநாயகன்  வால்மார்ட்டில்(Walmart) கிடைக்குதே...! ' என ஒரு அமெரிக்க நண்பி உள்பெட்டியில் வந்து அதிசயித்தார். 'அதிசயிக்கும் நீங்கள்  8-வது அதிசயம்' என அறுக்காமல் விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டேன்.

விசயம் இதுதான். அமெரிக்க வாசகர்கள் படித்து இன்புறும் வகையில் யாரோ வனநாயகன்  (மலேசிய நாட்கள்) நாவலை வால்மார்ட் தளத்தில் $22 டாலருக்கு விற்பனை செய்கிறார்களாம். 

யாரும்  அவ்வளவு கொடுத்து சிரமப்படவேண்டியதில்லை. அதில் பாதி விலைக்கே அமெரிக்காவின் எந்த மூலைக்கும் Media Mail-இல் நானே அனுப்பிவைப்பேனே.. எனச் சொல்லி அவரை அமைதிப்படுத்தினேன்.

வனநாயகன் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்பும் இப்படித்  தொடர்ந்து வாசிக்கப்படுவது மகிழ்ச்சி. 

மனத்தளவில் சோர்ந்து போகும்போதும், தளர்வடையும் போதும் அதுவே எனக்கு உற்சாகம் தரும் டானிக்.



https://www.walmart.com/ip/VanaNayagan-2997-2985-2984-3006-2991-2965-2985-3021-2990-2994-3015-2970-3007-2991-2984-3006-2975-3021-2965-2995-3021-Paperback-9788184936773/1441204226?from=/search




Saturday, April 27, 2024

வனநாயகன் குறித்து-34 (நல்லவேளை இந்த நாவலை என் மனைவி படிக்கவில்லை)

'நல்லவேளையாக  உங்களுடைய வனநாயகன் நாவலை என் மனைவி படிக்கவில்லை' என்ற தலைப்போடு வந்த இமெயிலைப் பார்த்தபோது சட்டென , அடடா.. நாம ஒன்னும் அப்படி  எழுதிவிடவில்லையே என்றே தோன்றியது.

ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து முழு குறிப்பைப் படித்தபோதுதான் அவர் சொல்ல வந்த விசயம் புரிந்தது. அந்தக் குறிப்பை அப்படியே கீழே கொடுத்துவிடுகிறேன். பாருங்கள்.



//'...உங்களுடைய வனநாயகன்(மலேசிய நாட்கள்) பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.( ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)..' //

இப்படி வனநாயகன் (2017) நாவல் வெளியாகி  7 ஆண்டுகளைக் கடந்த பின்பும் மறக்கப்படாமல் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவது மகிழ்ச்சி. அது குறித்து நல்லவிதாமாக நாலு வார்த்தை சொல்வதும், எழுதுவதும் கூடுதல் மகிழ்ச்சி.

Thursday, March 28, 2024

வனநாயகன் குறித்து-33 (நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்)

தற்செயலாக அமேசான் தளத்தில் குருபாரதி என்ற வாசகர்  வனநாயகன் பற்றி எழுதிய இந்தக் குறிப்பு கண்ணில் பட்டது. கூடவே 5 (5 star rating) நட்சத்திரக் குறியிட்டு இருப்பதையும் பார்த்தேன். 


குருமூர்த்தி போல வனநாயகன் (மலேசியநாட்கள்)-ஐ தொடர்ச்சியாக வாசித்து உற்சாகமளிக்கும் அனைவருக்கும் நன்றி !

//

எடுத்த புத்தகத்தை என்னால் மேசை மேல் வைக்க முடியாத அளவு விறுவிறுப்பு, தொடர்ந்து 3 நாட்களில் முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன்.  

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.

ஆசிரியருக்கு நன்றி !

//






Wednesday, February 14, 2024

வனநாயகன் குறித்து-32 (அறுசுவை உணவுபோல இந்த நாவல் வந்துள்ளது)

வனநாயகன் குறித்த முகநூல் வழியாக அறிமுகமான அமெரிக்கவாழ் அன்பர் தியா காண்டீபன் அவர்களுடைய கட்டுரை.

உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன் (மலேசிய நாட்கள்)’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார்.

“வனநாயகன் என்றால் என்ன?”

என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங் குட்டான்’ என்ற குரங்கினத்தைத்தான் ‘வனநாயகன்’ என்று சொல்வார்கள் என இந்தக் கேள்விக்கான பதிலை இந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே எழுத்தாளர் அவர்கள் சொல்லிவிடுகிறார்.

“சரி அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்?”

“திரும்பவும் கேள்வியா…?

“சொல்லுங்க பாஸ்…” 

“ம்ஹூம்… என்கிட்டேயா? சொல்லமாட்டேனே… முதலில் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.”

எல்லாக் கதைகளின் தலைப்பும் கதைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்றில்லை. ஆனாலும், இந்தக் கதையில் ஏதோ ஒரு மையப் புள்ளி எங்கோ ஒரு இடத்தில் கதையின் தலைப்புடன் ஒத்துப் போகிறது. “கண்ணாமூச்சி ரே ரே… கண்டுபிடி பார்ப்போம்…”

வெளிநாடுகளில் இந்திய மென்பொருள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைக்கான போட்டியில் போட்டுக் கொள்ளும் குடுமிப் பிடிச் சண்டைகள், உள்குத்துகள், குழிபறிப்புகள், நம்பிக்கைத் துரோகங்கள், ஊழல்கள் என்று மலேசிய மண்னைக் கதைக் களமாகக் கொண்டு சிறப்பான முறையில் அனுபவப் பதிவாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் மலேசியாவைத் தெரியாத ஒருவருக்கு அங்கு நடக்கும் நாட்டு நடப்புகள், ஊழல்கள், அரசியல் தில்லு முல்லுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த நாவல் பெரிதும் உதவுகின்றது. மற்றும் மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள், பார்க்கக் கூடாத விடயங்கள் என பல விடயங்களையும் இந்த நாவல் தொட்டுச் செல்கின்றது. அதனால் சில இடங்களில் நாவலின் கதை சொல்லும் பாணியில் இருந்து சற்று விலகி ஒருவகையான விவரித்தலை தந்துவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது தெரிகிறது. அவ்வாறில்லாமல் நடுவில கொஞ்சம் பக்கங்கள் நீண்டாலும், முடிந்தவரையில் கதையை பாதிக்காமல் எல்லாவற்றையும் அறுசுவை உணவுபோல தகுந்த அளவில் கலவையாக இந்த நாவல் தந்துள்ளது என்றே நான் சொல்வேன்.

என்னைச் சுற்றிப் பெண்கள் என்பதுபோல கதையின் நாயகனான சுதாவைச் சுற்றி சுஜா, பத்மா, சாரா, வீணா, லீசா, மற்றும் ஓவியா என்று பல பெண்களைளின் கதைகள் இடியப்பச் சிக்கல்களாகப் பின்னப்பட்டுள்ளன. இப்பெண்கள் அனைவரிலும் கடைசிவரை தொடரும் மர்மம் ஓவியா என்பேன்.

என்னதான் சுதா கதையின் நாயகனாக இருந்தாலும் அவனைச் சுற்றிப் பல சதிவலைகள் பின்னப்பட்டாலும் மனதுடன் ஒட்டிவிட்ட பாத்திரங்களாக ட்ரைவர் சிங், சாரா, மற்றும் பத்மாவைச் சொல்வேன். சம்பத் என்னதான் வில்லத்தனம் செய்தாலும் மனதுடன் ஒட்டாத பாத்திரமாகவே கடைசிவரை தொடர்கின்றான். ரவி மற்றும் ஜேகேயின் பாத்திரங்களும் தமக்குரிய பங்கைச் சிறப்பாகச்  செய்துள்ளனர்.

கதையின் தொடக்க அத்தியாயங்களில் பாத்திரங்கள் பேசுவதாகச் சில மலாய் சொற்கள் உட்பட ஆங்காங்கே நிறைய ஆங்கிலச் சொற்கள் வந்து கதைக்குள் குடி கொண்டாலும் பின்னைய அத்தியாயங்களில், “…தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்று தனக்குப் பிடித்தமான பெண்ணின் கைவிரல்களை சங்கத் தமிழில் வியப்பது அழகோ அழகு.

தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலையை முறியடிக்கும் கதையின் நாயகன் சுதா, கதை முழுவதும் ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் திண்டாடும் இடங்களைப் பார்க்கும்போது இவ்வுலகில் யாரைத்தான் நம்புவதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும், “…ஓட முடியலையா நட, நடக்க முடியலையா தவழு… இப்படி ஏதோ ஒரு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கணும்” (“If you can’t fly then run, if you can’t run then walk, if you can’t walk then crawl, but whatever you do you have to keep moving forward.” ― Martin Luther King Jr.) என்று மாட்டின் லூதர் கிங் சொன்ன தாரகை மந்திரத்தை முன்னிறுத்திக் கதைக்கு அப்பப்போ புத்துயிரூட்டி தொய்வின்றிக் கொண்டு சென்று செவ்வனே முடித்த எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

 -தியா காண்டீபன்-

இந்தக் கட்டுரை பனிப்பூக்கள் மின்இதழில் வெளியாகியிருக்கிறது. அதன் சுட்டி கீழே...

https://www.panippookkal.com/ithazh/archives/26724?fbclid=IwAR2t78BxeF1YCZRS72938gRbDu7C4tNnB25JF4yT-GN-q2zFhhNVbLOCqU8


Sunday, January 21, 2024

வனநாயகன் குறித்து-31 (இலக்கிய சுவையும், அறிவின் தெளிவும் பெற்றேன்)

ஒரு படைப்பாளிக்கு அதிக மகிழ்ச்சி தரும் விசயம் என ஒன்றிருந்தால் அது பாராட்டாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அது முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து வரும்போது இன்னமும் சிறப்பானதாகிறது.

அமெரிக்கா வந்த ஒரு அன்பர் வழியாக மலேசியா பயணப்பட்ட எனது வனநாயகன்(மலேசிய நாட்கள்) நாவல் ஒரு சிராம்பன் நண்பரை நெகிழச் செய்திருப்பது மகிழ்ச்சி (படம்). 


சிரம்பான் (Seremban) நகரம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கிறது. வனநாயகன் வந்ததிலிருந்தே அது குறித்து பல நல்ல அபிப்பிராயங்களை தொடர்ந்து  கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். வனநாயகன் மலேசியர்களுக்கானது மட்டும் இல்லை. தமிழர்களுக்கானது. வெளியீடு- கிழக்கு பதிப்பகம்.



Thursday, January 11, 2024

வனநாயகன் குறித்து-30 (அன்பர்கள் தைரியமாக வாங்கலாம்)

நட்புவட்டத்தில் இருக்கும் மலேசிய முகநூல் அன்பர் மங்கள கெளரி அவர்களுடைய வாழ்த்து.

 


Saturday, July 8, 2023

வனநாயகன் குறித்து-29 (கணினி மென்பொருளாளர்கள் அனைவரும்...)

முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!

//

ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.


வேலைபார்த்த இடத்தில் நான் பெற்ற கசப்பான மற்றும் கொடுமையான நிகழ்வுகளை பெற்ற ஒரு கணினி மென்பொருளாளனின் உணர்வுகளை சுவைபட தத்ரூபமாக விளக்கியிருந்தார். அந்த புதினத்தின் அட்டைப்படத்தில் உள்ள உராங்குட்டான் குரங்கின் படத்திற்கான விளக்கத்தினை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் கில்லாடிதான்.
கணினி மென்பொருளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புதினமாகும் "வன நாயகன்".
//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணைய வழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
மின்னூல்
அச்சுநூல்

Tuesday, December 27, 2022

வனநாயகன் குறித்து-25 (வசீகரமான தலைப்போடு அறுசுவை)

வனநாயகன்(மலேசிய நாட்கள்) குறித்து தனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்த தோழர் அப்துல் காதர் (சென்னை) அவர்களுக்கு மிக்க நன்றி !

//

வாழ்க வளமுடன்.

அன்புத் தோழர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களின் வசீகரமாக வனநாயகன் வாசித்தேன். சிறப்பான நாவல்.இது குறித்தான கருத்துப் பறிமாற்றம் செய்ய போதுமான அவகாசம் கிட்டவில்லை.

நாவல் வாசித்து நாட்கள் பலவாகி இருந்தாலும், அலுப்பு தட்டாத உங்களின் மொழிநடையாலும், இதுவரை நான் அறியாத பணி களத்தை விவரித்த அழகில், சுஜாதா( ரங்கராஜன்) க்குப் பிறகு சிலிக்கான் தொழில்நுட்ப பணிகளில் இப்படியும் வகையுண்டா? எனும் ஆச்சரிய மேலீட்டாலும், அத்துடன் கலகலப்பான க்ரைம் கலந்து விறுவிறுப்பு கூட்டியதாலும், இரண்டே நாள் அவகாசத்தில் படித்து முடித்து விட்டேன் என்றாலும், தொலைதூர அலுவலகப் பணிகளாலும், விடுமுறை; ஓய்வு எனும் அடிப்படையில் இங்கு வந்ததாக மனைவியும் மகளும் கருதியதாலும் விட்டு விட்டு பயணங்கள் என பொழுது கழிந்ததால், பொருத்தமான கால அவகாசம் கிட்டவில்லை.


ஒராங் உட்டான்(ஓராங் ஊத்தான்) என சாதாரணமாக அறியப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் வலிகளையும், அதனைத் தமிழ்ப்படுத்தி வசீகரமான தலைப்பிட்டதிலும் தொடங்கி, துறை சார்ந்த குறிப்புகள் அதனுடன் பின்னிப் பிணைந்த தொழிற்போட்டிகள், எல்லாவற்றையும் மீறிய அரசியல் குறுக்கீடுகள் அல்லது தலையீடுகள் அத்துடன் அளவான ரசபாசமான காதல் உணர்வுகள் என கலந்துகட்டி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.(ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)...

//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275

Wednesday, December 21, 2022

வனநாயகன் குறித்து-24 (ஐடி துறை பற்றி பேசும் நவீன புதனம்)

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து மணிகண்டன் அமேசான்  தளத்தில் பகிர்ந்த கருத்து..










Monday, September 12, 2022

வனநாயகன் குறித்து-23 (மலேசியா பற்றி அறியும் வாய்ப்பு)

கனடா வாழ் நண்பர் பாமா இதயகுமார் அவர்கள் அனுப்பிய செய்தி. நன்றி பாமா ..

 //

வணக்கம்,...

உங்கள் நான்கு புத்தங்களும் நிச்சயமாக பயனுள்ள சாரத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தன. கூடுதலாக, மலேசியா பற்றி அறிய கூடிய வாய்ப்பு (கதையின் மூலம் விமான செலவு இல்லாமல் அழைத்து சென்று விடும் வல்லமை).

அதேவேளை social media பற்றிய தகவல் , மிக அருமையான புத்தகங்கள். வாழ்த்துக்கள் !!!

//



Monday, November 22, 2021

வனநாயகன் குறித்து-20 (இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நினைவுக்கு வருகிறது)

அமெரிக்க வாசக நண்பர் திலகா எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" நாவல் வாசிப்பனுபவம் குறித்துப் பகிர்ந்தது ... நன்றி  திலகா!


//

வனநாயகன் (மலேசிய நாட்கள்) முதல் வாசிப்பு (பருந்து பார்வை) முடித்தேன். இன்னமும் ஆழமாக இரண்டாவது முறை படித்துப் பார்க்க வேண்டும்.


முதல் நாவலை ஒப்பிடும் போது எந்தவித தயக்கமும் இல்லாமல், சரளமாக வழுக்கிச் செல்கிறது எழுத்து நடைழ உரையாடல்கள் கன கச்சிதமாக அமைந்துள்ளன.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி  நாவலும் நினைவுக்கு வந்தது. அந்தக் கதையும் கிட்டத்தட்ட இதே சாயலுடன் இருக்கும். இரண்டிலும் கதாநாயகன் பாத்திரங்கள் மட்டும் சுபாவத்தில் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர்.


அவர் டில்லி சூழ்நிலையை மையமாக வைத்துக் கதையை நகர்த்தி இருப்பார். மொத்தத்தில் தேர்ந்த நாவலாசிரியருக்கான அறிகுறி தெரிகிறது. இது போல இன்னும் பல அற்புதமான நாவல்களைப் படைத்திட எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். !!

//

இணையத்தில் வாங்க இணைப்பு கீழே;

https://dialforbooks.in/product/9788184936773_/

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

Friday, July 23, 2021

வனநாயகன் குறித்து-19 ( படிக்க வேண்டிய புதினம்! )

அட்லாண்டா ஜெயா மாறன்-இன் எனது வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசிப்பனுபவம் (முகநூலில் பகிர்ந்தது) ... நன்றி ஜெயா !

//

வனநாயகன் - ஓர் அறிமுகம்: 

மனதுக்கு நெருக்கமான மலேசியாவைக் கதைக்களமாக வைத்து புதினம் எழுதும் கனவின் நனவு தான் 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' என்கிறார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்.

கோலாலம்பூரில் IT துறையில் வேலை செய்யும் திறமையான, நேர்மையான 28 வயது வாலிபன் சுதாங்கன். அவர் வேலை செய்யும் bank merger project வெற்றிகரமாக live சென்றவுடன், காரணமே சொல்லப்படாமல் fire செய்யப்படுகிறார். விரக்தி ஒரு புறம் குடும்பபாரம் ஒரு புறம் அழுத்த வேறு வேலை தேடுகிறார். மலேசியாவில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்து சம்பாதித்தாக வேண்டிய நிலை. ஆனால், அவருடைய முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. 

தன்னை வேலையைவிட்டுத் தூக்கியதற்கும், தான் மலேசியாவில் இருக்கவே கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் என்ன காரணம்? தான் அறியாமல் தன்னை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருப்பது ஏன்? என்ற குழம்புகிறார். 

சரி. இந்தியாவிற்குச் சென்று அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் பினனணியில் இருக்கும் அரசியலுக்கும் விடை தேடுகிறார். உள்ளே செல்லச் செல்ல அந்த ஆபத்தின் ஆழம் தெரிகிறது. 

அதில்  அவர் ஜெயித்தாரா? அதில் என்னென்ன ஆபத்துகள் இருந்தன? ...

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கதையை  கொண்டு செல்கிறார் எழுத்தாளர் . 

“சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்”

"அறையினுள்ளே முகம் சுழிக்க வைத்த சிகரெட் புகை நேரடியாகப் புற்று நோய் மருத்துவமனைக்கு வழி காட்டுவதாய் இருந்தது" 

"நீங்களெல்லாம் போலீசா? என்று கேட்ட போது, நான் ஆமாம் என்று பொய் சொன்னேன். அப்போதும் புத்தர் ஆழ்ந்த அமைதியில் கண் மூடித்தான் இருந்தார்" - என நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடை நயமாய்க் கூட வரும். 

மலேசியக் காடுகளில் திரியும் செந்நிற வாலில்லா மனிதக் குரங்குகளைப் (ஓராங் ஊத்தான்) போல கோலாலம்பூரின் கான்கிரீட் காடுகளில் திரியும் வன நாயகனின் கதை இது!

வனநாயகன் (ஓராங் ஊத்தான்) - படிக்க வேண்டிய புதினம்!

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

Monday, November 2, 2020

வனநாயகன் குறித்து-18 ( ஆர்வத்தைத் தூண்டுகிறது )

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  குறித்து எனது மதிப்பிற்குரிய தமிழ்
ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துகளை இங்கே நண்பர்களுடன் பகிர்கிறேன். 

//

வனநாயகன் புதினம்  ஒரேமூச்சில் படித்தேன்.

என்ன அழகாக விறுவிறுப்பாக,சொல்லாட்சிச் சிறப்புடன்  உள்ளது! முன்னரே கதை எழுதிப் பழக்கம் உண்டா? 

இதழ்களில் எழுதியது உண்டா? முன்னர் எழுதிய.பங்களா கொட்டாவை விட எவ்வளவு சிறப்பாக உள்ளது இது. 

உங்கள் சொந்தக்கதையா ? முழுவதும்  கற்பனையாகத் தெரியவில்லை.பெரிய சிக்கலான அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இல்லையென்றலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
.... காட்சிகளை வருணிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும்  தேர்ச்சி பளிச்சிடுகிறது.

பெண் கதாபாத்திரங்களின் பெயர் சுருக்கம் சற்று குழப்பமடையவைக்கிறது......

மற்றபடி, பெண்களை எழுத்தால் காட்சிப் படுத்துதல் மிக அருமை; தேர்ச்சி தெரிகிறது. சிங் பாத்திரம் நன்று.பெரிய இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள்,ஒழுக்கக்கேடுகள் அம்பலமாகியுள்ளன. மகிழ்ச்சி  பாராட்டுகள் !

//

வனநாயகன் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் (December 1, 2016) கடந்தும் படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு பேசப்படுவது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் தருகிறது.



Monday, October 5, 2020

வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)

"வனநாயகன்"  சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என  Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு  5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார்.  நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.

//

Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo

Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!

//


புத்தகத்தை இணையம் வழியாக வாங்க


Sunday, August 30, 2020

வனநாயகன் குறித்து-16 (கார்ப்ரேட்டின் மற்றொரு முகம்)

தமிழ்ப்படம் பார்க்கும் 1000 பேரில் ஒருவர் வாசிப்பவராக இருந்தால் கூட ஆண்டுதோறும் விற்பனையாகும் தமிழ்ப் புத்தகங்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  என எழுத்தாள நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.
அந்த 1000-க்கு 1 எனும் கணக்கெல்லாம் எந்த அளவு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால்,  கருத்துகளைப் பகிர்வதில் கண்டிப்பாக வாசகர்களைக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.  கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாகப்  பல வாசகர் கடிதங்கள், மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள்.
நேற்று "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து goodreads  தளத்தில் பிரியதரிசினி எழுதிய ஒரு மதிப்புரை கூட கண்ணில் பட்டது...


எப்பொழுதுமே மனிதன் தன்னை மற்றொன்றுடன் பொருத்தி பார்த்து தான் தன் சூழலின் ஆழத்தை உணருகிறான். நாவலில் சுதாவும் தான் வேலை செய்யும் நாடான
மலேஷியாவில் சொல்லப்படும் பழங்கதையான வனநாயகன் என்று அழைக்கப்படும் குரங்கின் நிலையுடன் தன்னை ஏமாற்றியவர்களின் செயல்களால் சொல்லமுடியா அவமானத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு ஒப்பீட்டு அளவில் மனதை தேற்றி கொண்டாலும் கிடைத்த குறுகிய காலத்தில் தனக்கான நியாயத்தைத் தேடுபவனுக்குக் கிடைத்தது கார்ப்ரேட்டின் மற்றொரு முகம். 


சுதாவின் வழியே மலேஷியாவின் முக்கிய இடங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும். மனிதர்களின் குணங்களும் என்று புதிய சூழலை கண் முன் கொண்டு வருகிறது. கதையின் மென்நகர்வு அதற்கு ஏற்ப அமைந்ததால் இயல்பான சம்பவங்களாக நடந்தேறுகிறது.

தற்பொழுது இந்த நாவலை படிக்கும் போது ஒரு தலைமுறை இடைவெளியை

துல்லியமாக உணரமுடிகிறது. கடந்தக் காலத்தை திரும்பி பார்க்கும் நிகழ்வாகவே முற்றிலும் அமைந்தது எதிர்பாராமல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதுவும் யாஹூ சாட் பற்றி எல்லாம் படிக்கும் போது ஞாபகங்களைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
ஒரு வருடம் மலேஷியாவில் இருந்த சுதாவிற்கு முடியும் காலம் கசப்பாகவே அமைந்தாலும் பல மனிதர்களுடனான தொடர்பு வாழ்ந்த காலத்தின் எச்சமாகவே மனதில் நின்றுவிடுகிறது. காதல் என்று நினைப்பது காதலல்ல அது உணரும் போது எதிரில் இருப்பது தான் காதல் என்று பத்மாவின் மூலம் அமைந்த நகர்வு எதார்த்தம்.

நாம் அனைவருமே எதார்த்தவாதிகள் தான் ஆனால் நாவல் வாசிக்கும் போது நம்மையும் மீறி ஒரு ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் மனதை அடக்கத் தெரியாதவர்களும் என்பது உண்மை. சுதாவிற்கு ஏற்பட்ட மறைமுகத் துரோகத்திற்கு அவன் எதாவது அதிரடி செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே கடைசிவரை வந்ததும் நம் மனம் தான்.

வாடிக்கையாளர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் தேவைப்படுபவர்களுக்கு. இதில் சம்பத் என்ற கதாபாத்திரம் கார்ப்ரேட்டின் ஒரு முகம். அது இல்லாத இடம் இல்லை. தன்னை உயர்த்த கீழே இருப்பதின் மேல் கால் மட்டும் தான் வைக்க வேண்டும் மனதை வைத்தால் முதல் பலி அவனாகத்தான் போவான்.

சாரா மாதிரி பத்திரிக்கையாளர்களின் பிரசன்னமே நியாயத்தின் வாழ்விற்காக எதிர்பார்த்திற்கும் மக்களுக்கு ஒரு பலத்தை அளிக்கிறது.

பலிகளைக் கொண்டு தான் கார்ப்ரேட் வளர்கிறது. உண்மைகள் வெளிவந்த பிறகு அதற்கான அழிவு என்று சொல்வது முடிவல்ல மற்றொரு தொடக்கத்தின் புள்ளி அது.

..
கிழக்கு பதிப்பக வெளியீடான வனநாயகன் புத்தகமாகவும், கிண்டிலிலும் கிடைக்கிறது.  இணைப்பு விவரங்கள்.
https://dialforbooks.in/product/9788184936773_/

https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-VanaNayagan-Malaysia-Naatkal-ebook/dp/B06X9VTR71



Saturday, March 14, 2020

வனநாயகன் குறித்து-15 (வரவேற்கத்தக்க ஒரு படைப்பு)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன் (மலேசிய நாட்கள்)"  குறித்து  ஜெர்மனி வாழ் சுபாஷிணி (தலைவர்- தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்கள் கடந்த டிசம்பரில் முகநூலில்  எழுதியது.  நன்றி  சுபாஷிணி !!

முனைவர் சுபாஷிணி மலேசியத்தமிழர் என்பதை இங்கே குறிப்பிட்டுச்சொல்ல விரும்புகிறேன்.
**************************
ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து இஸ்தான்புல்.. அங்கிருந்து குவைத்.. என தமிழகத்திற்குப் பயணம் தொடர்கிறது. பயணத்தில் துணையாக ஆரூர் பாஸ்கர் எழுதிய வனநாயகன் - மலேசிய நாட்கள் நாவல்

வித்தியாசமான கதை பொருளில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். வாசிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது. துறை சார்ந்த அனுபவங்கள்
, மலேசிய வாழ்க்கைச் சூழலின் பதிவுகள்.. இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.. அனுபவங்கள்.. என கதையை மிகச் சிறப்பாக அமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர். இதுவரை பயணத்தில் நாவலின் பாதி பகுதியை முடித்து விட்டேன். மேலும் தொடர வேண்டும் சென்னை வந்தடையும் வரை..


************
நூல் கைக்கு வந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.. இடையில் கல்வெட்டுப் பயிற்சி, புலம்பெயர்வு தொடர்பான ஆய்வுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நடவடிக்கைகள் சார்ந்த ஆய்வு, ஐரோப்பியர்களின் தமிழகம் தொடர்பான பங்களிப்புகள் பற்றிய ஆய்வு என பல்வேறுபட்ட வகையில் எனது கவனம் குவிந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நாவலை வாசித்த அனுபவம் அண்மையில் கிட்டியது. ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் விமானநிலையத்தில் தொடங்கிய வாசிப்பு அடுத்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் வந்து அங்கு சில மணி நேர காத்திருப்பு... பின்னர் அங்கிருந்து குவைத்துக்குப் பயணம்... பின்னர் அங்கு ஓரிரு மணி நேர காத்திருப்பு.. பின் அங்கிருந்து சென்னை என பயணம் நீண்டிருந்தது. பயணத்தின் களைப்பைப் போக்கும் வகையில் நாவல் வாசிப்பு எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது.
நாவலின் தலைப்பு: வனநாயகன் -மலேசிய நாட்கள்
நாவலாசிரியர்: ஆரூர் பாஸ்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
இந்த நாவலின் கதைக்களம் முழுவதுமாக மலேசிய சூழலில் பின்னப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மலேசிய மக்கள் எழுதும் கதைக்கு மாற்றாக, இந்திய பின்புலத்தைக் கொண்ட ஒரு நாவலாசிரியர் எழுதிய நாவல் இது. இந்த நாவலின் கதைக்களம் தமிழகத்திலிருந்து வேலை தேடி மலேசியா வந்து அங்கு பணியாற்றும் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறைசார்ந்த வல்லுநர் ஒருவர் அனுபவிக்கும் பல்வேறு அனுபவங்களை கதையாக்கி காட்டும் ஒரு நாவலாக அமைந்துள்ளது.
கதையின் நாயகன் சுதா. அவனைச் சுற்றியே கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதை செல்கிறது. கதாநாயகனின் அனுபவங்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், மலேசிய வரலாறு, சுற்றுச்சூழல், தற்கால நிலை, வணிக சூழல், வணிகத்திற்குள் இயங்கும் அரசியல் தன்மை, மூன்று பெரும் இனங்களான தமிழர்,
சீனர், மலாய்க்காரர் ஆகியோரிடையே நிலவும் சிறுசிறு வேறுபாடுகள் ஆகியவற்றை துல்லியமாக பதிந்து வைக்கும் ஆவனக் குறிப்பாகவும் இந்த நாவல் அமைந்திருக்கின்றது.
பொதுவாகவே காதல், திருமணம், பிரிவு, குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள், ஏமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் பெரும்பாலான நாவல்களில் இருந்து மாறுபட்ட உத்தியாக புலம்பெயர்ந்து தொழிலுக்காகச் செல்லும் தேர்ச்சி பெற்ற ஒரு வல்லுநர், புதிய நாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், தொழிற்சார்ந்த போட்டிகள், அவை தருகின்ற சவால்கள் அவற்றை எவ்வாறு கதாநாயகன் எதிர்கொள்கிறார் என்ற வகையில் இந்த நாவல் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றது. மலேசிய சூழலில் தமிழ் மக்களின் உடை
அலங்காரம்,தோற்றம் பேச்சு வழக்கு, பல இனங்கள் ஒன்றுபட்டு வாழும் சூழலில் தமிழ் மக்களின் நிலை என்பவற்றை நூலாசிரியர் மிகக் கவனமாக கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்து அவற்றை பதிவாக்கி இருக்கின்றார். சிறு சிறு விஷயங்கள் கூட இந்த வகையில் இந்த நாவலில் பிரதிபலிக்கின்றன. மலேசியத் தமிழர்கள் ஒரு தனி இனம் என்ற அளவில் தோற்றம், உடை அலங்காரம், சிந்தனை சமூக செயல்பாடுகள் என இயங்கும் சூழல் கடந்த ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகால நிலையில் தமிழகத்திலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. நாவல்கள் அல்லது கதைகளை எழுதுவோர் இதனை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு எழுதும்போது தான் புதிய நிலத்தின் மண்ணின் மனம் நாவல்களில் சரியாக ஆவணப் படுத்தப் படும். இந்த நாவலில் ஆசிரியர் அதனை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற எனக்கு கதாநாயகனின் சிந்தனையோட்டமாக வருகின்ற ஒவ்வொரு வரிகளும் என்னை மீண்டும் கோலாலம்பூர் நகருக்கே இழுத்துச் சென்று விடுகின்றன. அந்த அளவிற்கு மிக விரிவான விளக்கங்களாக ஒவ்வொரு சிறிய விஷயங்களும் கையாளப் பட்டிருக்கின்றன. கணினித்துறையில் நிலவுகின்ற தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி விவரிக்கும் வகையில் செல்லும் பகுதிகள் நாவலில் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் பார்வையைக் காட்டுவதாக அமைவதால் நாவல் உத்தியில் தொழில்நுட்ப கூறுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த எழுத்துமுறை வாசிக்கின்ற வாசகர்களுக்கு வழங்குகின்றது.
நூலின் பாதிப் பகுதியை வாசிக்கும் போதே கதாநாயகனுக்கு இறுதியில் என்னவாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு குறையவில்லை. மிகச் சுருக்கமான ஒரு பகுதிதான் என்றாலும் இறுதிப்பகுதி மனநிறைவாக அமைந்திருக்கின்றது. பத்மா மனதில் நிறைந்து நிற்கின்றார்.
வனநாயகன் மலேசிய நாட்கள் - வரவேற்கத்தக்க ஒரு படைப்பு.
தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு தமிழ்மக்கள் செல்கின்ற சூழல் அமைந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் தேவைக்கேற்ப எழுதப்பட்ட ஒரு நாவல் என்று நிச்சயம் கூறலாம். நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
-சுபா


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க: