Showing posts with label ‬ ‪#‎தமிழ்நதி. Show all posts
Showing posts with label ‬ ‪#‎தமிழ்நதி. Show all posts

Thursday, April 23, 2020

மாயக்குதிரை - எழுத்தாளர் தமிழ்நதி (ஆனந்தவிகடன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு)

ஒரு பதினைந்து பக்கச் சிறுகதை ஒரு வாசகனைத் தனது கால வாழ்வை, அந்த வாழ்வில் தான் சந்தித்த பல  மனிதர்களை, முக்கியத் தருணங்களைத் திரும்பிப் பார்க்க செய்கிறது என்றால்,  அதைவிட ஒரு சிறந்த சிறுகதைக்கு வேறு என்ன சிறப்பு இருந்துவிட முடியும்.

அந்த வகையில், எழுத்தாளர் தமிழ்நதியின் "மாயக்குதிரை" சிறுகதைத் தொகுப்பில் இன்று "கறுப்பன் என்றோரு பூனைக்குட்டி" சிறுகதையைக் கண்டடைந்தேன்.  அபாராம். அதுபோல, தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதை "மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை".

பொதுவாக, தமிழ்நதியின் எழுத்து அன்பைக் குழைத்து நெஞ்சுக்கு நெருக்கமாய் நின்று உறவாடும் எழுத்து. பெண்களின் மனத்தை, அன்றாடங்களின் யதார்த்தங்களை நுட்பமான மொழியில் கடத்தும் ஆற்றல் கொண்ட உணர்வுப் பூர்வமான எழுத்து. அந்த எழுத்தில்  பல நாட்களுக்குப் பிறகு அவருடைய பார்த்தினியம் நாவலில் கண்ட வானதியை இன்று "கறுப்பனில்.." மனோகரியாகக் கண்டேன்.  

நான் " மாயக்குதிரை"  தொகுப்பில் மேலே சொன்ன இரண்டு கதைகளைத் தேடி கண்டடைந்தது போல நீங்களும் உங்களுக்கான கதைகளைக் தேடிக் கண்டடைய வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பிருந்தால்  "மாயக்குதிரை"  வாசித்துப் பாருங்கள்.

நூல்:  மாயக்குதிரை (சிறுகதைகள்)
நூலாசிரியர்: தமிழ்நதி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 150.00

*************