Friday, March 30, 2018

எழுத்தாளர் சாரு நிவேதிதா

நான் எழுத்தாளர்   சாருவுடன் ஒத்துப்போகிற விசயம்
ஒன்று இருக்கிறது என்பதையே இன்று  அவருடைய "கோணல் பக்கங்கள்"
வாசிக்கும் போதுதான் கண்டுகொண்டேன்.

20-25 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி அவர்
எழுதியது..

//
இங்கே தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசுவதற்குக் கூச்சப்படுகிறார்கள்.
வட இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு சற்றும் கூச்சப்படுவதில்லை. அமெரிக்காவில் வாழும் ஒரு சீக்கியப் பெண் மற்றொரு
சீக்கியப்பெண்ணிடம் பஞ்சாபியில்தான் பேசுகிறாள்.

ஆனால், தமிழருக்கோ ஆங்கிலம்தான். பிரபலங்களாக
இருப்பவர்கள் தங்கள் குழந்தைக்குத் தமிழ் தெரியாது
என் சொல்கிறார்கள். இப்படிச் சொல்ல அவர்கள் கூச்சப்படுவதில்லை. இதுவே ஃபிரான்சாக இருந்தால் 'தயவுசெய்து நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்' எனச் சொல்லி நாடு கடத்திவிடுவார்கள்...

தமிழ் பேசுவது தமிழ்நாட்டிலேயே அகெளரவமாக்க் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் அறிவாளிகள்,உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இங்கே உள்ளவர்களிடம் இருக்கிறது. இது போன்ற அவலம் வேறு எங்கேனும் இருக்குமா என்று தெரியவில்லை...
//

இன்று முன்பைவிட நிலைமை மோசமாகியிருக்கிறதாகவே உணர்கிறேன்.

#தமிழ்

1 comment: