Saturday, January 6, 2024

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் திருவாரூரிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணம்தான் என்றாலும் ஜனவரியில் (2023) தான் போகும் வாய்ப்பு கிடைத்தது. அது பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கமாக காத்தாடும் அந்தக் கோயிலில் அன்று எங்கும் மனித தலைகள் என்றார்கள்.



இந்தக் கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராகவும் இருந்திருக்கிறது.

இதுபோல கலையம்சத்தைக் கல்லிலும், மண்ணிலும், உலோகங்களிலும் கண்ட மனிதர்கள் மறைந்தாலும் அதற்கு பிறகு வரும் தலைமுறைகள் அதை வியந்து போற்றி பாதுகாப்பது சிறப்பு.

அந்த விதத்தில் காலம் கடந்து நிற்கும் அழகிய கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் துறையின் வசம் இருப்பதும் அதைக் கட்டுவித்த இராஜேந்திர சோழன் நினைவு கொள்ளப்படுவதும் சிறப்பு.

No comments:

Post a Comment