சில சமயங்களில் நடக்கும் சில நிகழ்வுகள், “இது உண்மைதானா?” என்று நம்மையே நாம் கேள்வி கேட்டுக்கொள்ளும் அளவுக்கு வியப்பை ஏற்படுத்தும். அப்படியான ஒன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் இருந்து ஆண்டுதோறும் வரும் 'ராயல்டி' எனும் மதிப்பூதியம்.
அமெரிக்காவில் மேற்படிப்பு எனும் காரணத்தால் கடந்த ஓராண்டாக எழுத்தில் இருந்து சற்று விலகி இருந்தபோதும், அவர்களிடம் அச்சில் இருக்கும் எனது நூல்களுக்கான விற்பனையைக் குறிப்பிட்டு, உரிய மதிப்பூதியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தி விபரத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறார்கள். இது பாராட்டத்தகுந்த ஒன்று. இதுபோல, கணக்கு வழக்குகளில் மேற்கு நாடுகளைத் தொடும் தமிழ்நாட்டு பதிப்பகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஜீரோ டிகிரியும் ஒன்று. நன்றி !!
ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே. தனது 10-வது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னுடைய 'வனநாயன் (மலேசிய நாட்கள்)' நாவலை மறுபதிப்பாக வரும் புத்தகக் காட்சிக்குக் கொண்டுவரலாம் என்றொரு யோசனை இருக்கிறது. காலம் கனிகிறதா பார்ப்போம்.
No comments:
Post a Comment