Showing posts with label #fetna. Show all posts
Showing posts with label #fetna. Show all posts

Tuesday, July 7, 2026

39வது பெட்னா(FETNA) பேரவை விழா - இணை அமர்வு 1

நியூஜெர்சியில் 2026, ஜூலை 2 முதல் 4 வரை பிரம்மாண்டமாக நடைபெற்ற  39-வது பெட்னா(FETNA) பேரவை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பெட்னா இலக்கியகுழு இரண்டு இணை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த இணை அமர்வுகளில் கவிஞர் பெருந்தேவி, கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் தமிழ்நதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

ஜூலை 3-ம் தேதி வெள்ளி அன்று நடந்த அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

முதலில் கவிஞர் பெருந்தேவி , "புதுமைப்பித்தன்: நவீன இலக்கியத்தின் முகம்" என்ற தலைப்பில், புதுமைப்பித்தனின் படைப்புகளும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் குறித்து பேசினார். அடுத்து பேசிய எழுத்தாளர் சரவண கார்த்திகேயன், "நவீனத் தமிழ்ப் புனைவின் பரிணாமம்" என்ற தலைப்பில், நவீனத் தமிழ்ப் புனைவின் வளர்ச்சிப் பாதை, மாற்றங்கள் மற்றும் புதிய போக்குகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். அவர் தன்னுடைய பேச்சில் ஓர் எழுத்தாளராக தனது அவதானிப்புகளாக இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள், வாசகர்கள், பதிப்பகங்கள்,சமூகம், செயற்கைத் தொழில்நுட்பம் என்பது மாதிரியான பத்து விசயங்களைத் தொட்டு பேசியது இரசிக்கும்படி இருந்தது.
அடுத்து பேசிய எழுத்தாளர் தமிழ்நதி, "புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – ஒரு பார்வை" என்ற தலைப்பில், புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், வளர்ச்சி மற்றும் அதன் சமகாலப் பரிமாணங்கள் குறித்து பேசினார். அது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மேல் வைக்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போலவும் அமைந்தது. இறுதியாக பேசிய எழுத்தாளர் சாம்ராஜ், "தமிழ்ச் சிறுகதைகளும் பகடியும்" என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதைகளில் பகடி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, அதன் இலக்கியப் பங்கு மற்றும் சமூக விமர்சனத் தன்மை குறித்து உரையாற்றினார்.


இவர்களுடைய அனைத்து உரைகளும் சமீபத்தில் நான் கேட்ட உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக செறிவானதாக இருந்தது. குறிப்பாக, புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்தும் அவருடைய காஞ்சனை சிறுகதை குறித்தும் பேசியது தனது நெடுநாள் கனவு என பெருந்தேவி நேர்பேச்சில் குறிப்பிட்டார். இதில் இருந்து அதற்கான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

சாம்ராஜ் தனது உரை நடிகர் கமலுடைய திரைப்பகடி என்பது மலையாள பட தாக்கதில் வந்தது, தமிழ் திரையில் மதுரைத் தமிழை பகடியாக்கி புதியபாதை கண்டவர் வடிவேலு, பொதுவாக சுயபகடி என்பது தமிழி்ல் குறைவு அதனால்தான் பகடி நிறைந்த எழுத்துகள் வருவதில்லை. இலக்கியம் விடுதலைக்கானது, பகடி அதைத் தரவல்லது என்பது போன்ற பல கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்திருந்ததும் சிறப்பு.

Tuesday, April 2, 2019

கீழடி நம் தாய் மடி

நண்பர்களுக்கு முன்பே சொன்னதுபோல அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.  இந்த மாநாட்டின் மையக் கருத்து “கீழடி நம் தாய் மடி” என்பதாகும்.

மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.




Sunday, July 8, 2018

தமிழ் - நமது அதிகாரம், நமது உரிமை, நமது பெருமை

நண்பர்களுக்கு,

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை-யின் (பெட்னா, Federation of Tamil Sangams of North America) 31வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலத்தின் ப்ரிஸ்க்கோ நகரில் ‘மரபு, மகளிர், மழலை’  (ஜூன்-29, 30, ஜூலை 1) எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

தமிழ் விழா மலரில்  "தமிழ் - நமது அதிகாரம், உரிமை, பெருமை" எனும் தலைப்பில் வெளியான எனது 
கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்.  நன்றி!!

-ஆரூர் பாஸ்கர்.
ஜூலை, 8 , 2018

1.

2.
3.

5.