Wednesday, June 16, 2021

பனிப்பாறைகள் (iceberg) உடைந்து உருகுவதால் என்ன நட்டம் ?

காஃபியில் சர்க்கரைக்குப் பதில் தவறுதலாக உப்பு கொட்டுவது வேண்டுமானால் கொஞ்சம் அபூர்வமான நிகழ்வாக இருக்கலாம். ஆனால்,  பனிப்பாறைகள் உடைந்து கடலுக்குள் விழுந்து உருகுவது என்பது காஃபியில் சர்க்கரை கொஞ்சம் தூக்கலாகி விடுவது போலொரு சாதாரண நிகழ்வாகி விட்டது.

அந்த விதத்தில்,  அண்டார்டிக்காவில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று  சமீபத்தில்  உடைந்து "வெடல்" கடற்பகுதிக்குள் மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். 



 ‘அண்டார்டிகா ஏ-76‘  எனப்  பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு  கொண்டதாம்.  நீளம் 175 கி.மீ. அகலம் 25 கி.மீ. ஏறக்குறைய நமது சென்னையின் பரப்பளவைப் போல இரண்டு மடங்கு.




இப்படிப் பனிப்பாறைகள் (iceberg) உடைந்து உருகுவதால் என்ன நட்டமாகிவிடப் போகிறது ?.  விஞ்ஞானிகளைக் கேட்டால், இது ஒரு இயற்கை நிகழ்வே. இவை உருகுவதால் கடல் மட்டத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.  இது நமது டம்ளர்களில் மிதக்கும் ஒரு பனிக்கட்டி துண்டு போன்றதே  என்கிறார்கள்.  அதேசமயத்தில், பனி அடுக்குகள் (ice sheets) உருகினால் (நிலத்தோடு உறுதியாக இணைந்துள்ளவை) கடல் நீர் மட்டம் உயர்ந்து கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கின்றன என்கிறார்கள்.




அதைப் பருவநிலை மாற்றத்தோடு தொடர்பு படுத்துவதை யார் ஏற்றுக்
கொள்கிறார்களோ இல்லையோ பல அரசியல்வாதிகள்  ஏற்றுக்கொள்வதில்லை.  

இப்படிக் காலநிலை மாற்றமும் அரசியல் சித்தாந்தத்துக்குள் சிக்கியது  என்பது ஒருவித பின்னடைவே.

1 comment: