Saturday, October 10, 2020
ஸீரோ டிகிரி பப்ளிஷார்
Monday, October 5, 2020
வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)
"வனநாயகன்" சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு 5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார். நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.
//
Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo
Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!//
Sunday, October 4, 2020
350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மச் சாவு
ஓராயிரம் யானை கொன்றால் பரணி என வீரத்தின் பெயரால் அன்று நம்நாட்டில் பல்லாயிரம் யானைகள் அழிந்தன. பிறகு ஆங்கிலேயர்கள் காலத்திலும் வேட்டை மோகத்தால் பல்லாயிரக்கணக்கில் யானைகள் அழிந்தன.
இப்போதும் நாம் பெரிதாகத் திருந்திவிடவில்லை. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுகிறோம். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக்குகிறோம். நீராதாரம் தேடி வரும் யானைகளைக் கூட வெடி வைத்துக் கொல்கிறோம். அத்தோடு விடாமல் காட்டில் மிச்சமிருக்கும் சொற்ப யானைகளையும் கூட அதன் தந்தங்களுக்காகவும், அடிமை வேலை செய்யவும் நாம் விரட்டிக்கொண்டு தான் இருக்கிறோம்.
நமது ஆசிய யானைகளின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் மட்டும் 50 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள். இன்று உலக அளவில் சுமார் 40,000 ஆசிய யானைகள் மட்டுமே வனங்களில் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தான் இருக்கின்றன என்று வேண்டுமானால் நாம் கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்.
அதுபோல, ஆப்ரிக்கக் கண்டத்தில் போட்ஸ்வானாவில் தான் அதிக அளவு யானைகள் (ஆப்பிரிக்க) இருக்கின்றன. அங்கே கடந்த மே, ஜூன், ஜூலை வரையான 3 மாதத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன.
இது குறித்து நடந்த விசாரணையின் முடிவில் யானைகள் நச்சுத்தன்மை உடைய நீரை அருந்தியதால் மரணமடைந்திருக்கின்றன என
அறிவித்திருக்கிறார்கள். கூடவே, இறந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருப்பதால் இது மனிதவேட்டை இல்லை என்பதை அரசு தரப்பில் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், மற்ற காட்டு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் யானைகள் மட்டும் இப்படிப் பரிதாபமாக இறந்திருக்கிறன. அதனால், இந்த விவகாரம் தற்போது சர்வதேச கவனம் பெற்று விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மற்ற விலங்குகள் போல் அல்லாமல் யானைகள் மட்டுமே மனிதர்களின் விளைநிலங்களைத் தேடிப் போகும் குணம் கொண்டது என்பதை இங்கே வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
செய்தி இணைப்பு:
https://www.cnn.com/2020/09/21/africa/botswana-elephant-deaths-intl/index.html
Wednesday, September 30, 2020
இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது சொன்னது...
இலங்கை வானொலி புகழ் பி. எச். அப்துல் ஹமீதின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன்.
நேர்காணல் கண்ட 'பட்டிமன்ற புகழ்' பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஹமீதுவிடம்
சரி, பெரும் நிறுவனங்களின் ஊடகங்கள் தான் அப்படி என்றால் சாமானியர்களின் கடைசி போக்கிடமான இணையமும் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன.
அந்த நேர்காணலின் முதல் பகுதியின் இணைப்பு
Saturday, September 26, 2020
இர்மா-அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினம்
"இர்மா-அந்த ஆறு நாட்கள் "குறித்து முகநூல் வாசகர் Senthan Sethirayar அவர்களுடைய பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி செந்தன் !!
//புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் ஈழ புலம்பெயர் இலக்கிய சூழலையொட்டியே அதிகம் இருக்கும். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிணி தொழில்நுட்ப வேலைகளினால் கடந்த இருபது வருடமாக பெருமளவில் அதிகரித்ததென்றாலும், இயல்பிலேயே வாசிப்பு தன்மை அதிகமில்லாததால், நம் சமூகங்களிலிருந்து பெருமளவிலான படைப்புகள் உருவாவதில்லை. அப்படியான ஒரு சூழலில் எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் “இர்மா - அந்த ஆறா(ஆறு) நாட்கள்” எனும் புதினம் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை பதிவு என்றே சொல்லலாம்.
எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் புத்தக வாசிப்பு பற்றிய பேஸ்புக் நேரலையை பார்த்தபிறகு அவருடைய “இர்மா - அந்த ஆறா (ஆறு) நாட்கள்”
நாவலை கிண்டிலில் வாங்கினேன். மனிதர் ஏமாற்றவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக ஃப்ளோரிடா வாசியானதால், இங்கு மக்கள் ஹரிக்கேன் எனும் பெரும்புயலுக்கு எப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியும், அதே சமயம் தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பலரும் அவர்களின் இர்மா புயல் காலத்திய நினைவுகளை பகிர்ந்திருந்தது என கிட்டதட்ட இந்த புனைவு குறிக்கும் காலநிகழ்வுகளில் இயல்பாக பொருத்திக்கொள்ள முடிந்தது.
கதையின் மையம் என்பது வாழ்வின் நிலையில்லாமையை காட்டுகிறது, நிகழ்வுகள் யாவும் பரணி எனும் கதை நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. பரணி வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும், சொந்த ஊரின், மக்களின் நினைவுகள் பரணியின் மனதில் வரும் போது காட்டும் நிலையில்லாமையிலிருந்து, இர்மா எனும் ராட்சத ஹரிகேனினால் தன் வீட்டை விட்டு பாதுகாப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் போது பரணிக்கு ஏற்படும் மனபோராட்டம் காட்டும் நிலையில்லாமை என்று தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் மிக விரிவாக அமெரிக்க வேலை சூழல், வீட்டு சூழல், குடியுரிமை பிரச்சனைகள், புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் அமெரிக்க மக்கள் பற்றிய அவதானிப்புகள், அமெரிக்காவின் பொது நிர்வாக கட்டமைப்புகள், கருப்பின மக்களின் துயரங்கள் என்று பலவற்றையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் அதுவே சற்று தோய்வாகவும் இருக்கிறது. ஆனால் அமெரிக்க புலம்பெயர் சூழலில் வாழாதவர்க்கும் சேர்த்தே எழுத்தப்பட்டது என்பதால்,இப்படி இருப்பதே புனைவினுள்ளே வாசகனை இழுக்க செய்கிறது.
ஹரிக்கேன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ஊரைவிட்டு வேறு பாதுக்காப்பான ஊர்களுக்கு போகலாமா வேண்டாமா என்று நடக்கும் மன போராட்டம் என்பது ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்திராதவற்கு விளங்காத ஒன்று. ஆனால் அப்படியான நாட்களில் பரணியின் எண்ணவோட்டம் என்பது இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த ஹரிக்கேன் சீசனில் வந்த புயலில் ஏறகுறைய இதே நிலைமை தான் எனக்கும்.

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முதல்தலைமுறை தமிழர்கள் பலரின் நெருக்கடிகளை அப்படியே எழுதியிருக்கிறார். பரணி புயல்கால சமூக பணிகளுக்கு(volunteering) தன் பெயரையும் கொடுக்கட்டுமா என கேட்கும் போது அவன் மனைவி, வீட்டில் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு தங்கள் பாதுக்காப்பே கேள்விக்குறியாக இருக்கும் போது எதற்கு இந்த வேண்டாத வேலை என கடிந்துகொள்வது, என்ன தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வீடு வாங்கி பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது பலருக்கும் புலம்பெயர்ந்த நிலம் அன்னிய நிலமாகவே தம் காலமுழுதும் இருக்கும் என்பதை அழகாக சில சொற்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்.
அதே போல, தன் சக பணியாளர்கள் புயலுக்கு பிறகான மறுசீரமைப்பு வேலைகளில் கடுமையாக வேலை செய்யும் போது, தான் மட்டும் அட்லான்டாவில் பாதுக்காப்பாக இருப்பதில் பரணிக்கு ஏற்படும் குற்றயுணர்ச்சியை காட்டும் இடங்கள் அருமை.
அமெரிக்க வாழ்க்கை பற்றி பரணியின் எண்ணங்களாக வரும் வார்த்தைகள் எல்லா புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களே, இவ்வாழ்க்கையில் பல சமயங்களில் பெறுவதை விட இழப்பது அதிகமென்றே தோன்றும். இங்கே புதிதாக தமிழர்களை சந்திக்க நேர்ந்தால், பேச்சு அமெரிக்கா வந்ததினால் ஏற்படும் இழப்புகளை பற்றி பேசாமல் முடியாது.
அதே சமயம், சில சமயங்களில் பரணியின் மனவோட்டங்களாக எழுத்தாளரின் எண்ணங்கள் வலிந்து திணிக்கப்பட்டது போன்று தோன்றவதையும் சொல்லியாக வேண்டும் , குறிப்பாக புயலை நினைத்து வருத்தப்படும் போது வாழ்கையை பற்றிய அவதானிப்புகள் ஏற்கனவே பல புதினங்களில் படித்தது போலவே இருப்பது, அட்லான்டா நோக்கி பயணப்படும் போது வரும் புலம்பெயர்தல் பற்றிய வர்ணனைகள், என்று, சில இடங்களில் சற்று ஆசுவாசபடுத்துகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் கருப்பர் இன சம்பந்தமான பதிவுகளும், புனைவும் தேவையில்லாமல் கருப்பர்கள் பற்றிய கருத்தை பதிவிட எழுதப்பட்ட இடைச்சொருகளாக தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.
இதையெல்லாம் தாண்டி அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மனவோட்டங்களையும் அதனுள்ளே இழையோடும் நிலையில்லாமையையும் இவ்வளவு விரிவாக வேறு யாரேனும் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதற்காகவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினங்களில் ஒன்று.
ஒரே வருத்தம், பதிப்பித்த நூலில், மேலும் சில பின் இணைப்புகளை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அவற்றை வாசிக்கமுடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும்.
கிண்டிலில் வாங்க - https://www.amazon.com/அந்த-நாட்கள்-Tamil-ஆரூர்-பாஸ்கர்-ebook/dp/B07NBDM78S/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=இர்மா&qid=1592258584&sr=8-1
//
Wednesday, September 23, 2020
பாமாயிலும் குரங்குகளும்
ஓராங் ஊத்தான் (Orangutan) குரங்கிற்கும் நாம் சாப்பிடும் காலை உணவான சீரியலுக்கும் (Cereals) தொடர்பிருக்கிறதா ? ஆமாம். சரி. ஓராங் ஊத்தானுக்கும் பாமாயிலுக்கும் ? அதற்கும் தொடர்பு இருக்கிறது. மேலே படியுங்கள்...
நமது அன்றாட உணவில் பாம் ஆயில் தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அந்தப் பாமாயில் தோட்டங்களை அமைக்க பல இலட்சம் ஏக்கர் மழைக் காடுகள் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.
இதனால், அந்தக் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் கொன்றழிக்கப்படுகின்றன. முக்கியமாக ஓராங் ஊத்தான் குரங்குகள் பல்லாயிரக்கணக்கில் செத்து மடிகின்றன. இந்த அவலங்களை என்னுடைய "வனநாயகன்" நாவலும் பேசி இருக்கும்.
இந்த விவரங்களை அறிந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தற்செயலாக தங்களுடைய காலை உணவான சீரியலில் பாமாயில் கலந்திருப்பதைக் கவனித்தனர். அதுவும் காடுகளை முறையின்றி அழித்து பாமாயில் தோட்டங்களை ஏற்படுத்தும் ஒரு நிறுவனத்திடம் வாங்கியவை.
உடனே செயலில் இறங்கிய அந்தக் சிறுமிகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தினார்கள். அது மட்டுமல்லாமல், இது குறித்து தயாரிப்பவர்களுக்கு ஒரு புகார் கடிதமும் அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் புகார் கடிதத்தில் எத்தனை பேர் கையெழுத்திட்டவர்கள் எத்தனை பேர்தெரியுமா ? 8 இலட்சம் பேர்.
மேலே சொன்ன புகாருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த சீரியல் நிறுவனம். வேறு வழியில்லாமல், வரும் நாட்களில் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாத பாமாயில் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டும் எண்ணெய் கொள்முதல் செய்வதாக அறிவித்திருக்கிறது.
படத்தில்- சூழல் சீர்கேட்டுக்கு எதிராக கொடி பிடித்த இங்கிலாந்து சிறுமிகள் ஆஷா (12) , ஜியா (10).
இப்படிப் பாமாயில் மரத் தோட்டங்கள் அமைக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஒராங்குட்டான்கள் கொல்லப்படுகின்றன என்பது இங்கே கூடுதல் செய்தி.