சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் கார், பைக் ஓட்டுவது என்பது ஒரு தனிக் கலை. சிறுநகரங்களில் வண்டிகளை ஓட்டிப் பழகியவர்கள் ஆரம்பத்தில் கண்டிப்பாக திணறிதான் போவார்கள்.
குறுகிய சாலைகளில் வகை தொகையின்றி விரையும் வாகனங்கள் ,
கொளுத்தும் வெயிலில் சிக்னல்கள் என நெரிசலான போக்குவரத்தில் ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
அதனால் முன்பெல்லாம் சென்னையை நன்றாக தெரிந்தவர்கள் தான்
டாக்சி, ஆட்டோ டிரைவர்களாக இருந்தார்கள். ஆனால், இப்போது
சென்னையில் ஜிபிஎஸின் கை ஓங்கியிருக்கிறது. பலர்
ஜிபிஎஸ் கையில் இருக்கும் தைரியத்தில் நகரில் பலர் டாக்ஸி டிரைவர்களாகி விட்டார்கள். குறிப்பாக ஓலா டிரைவர்கள். ஓலா வண்டி ஓட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக வேலைக்கு வந்திருக்கும் டிரைவர்கள் ஜிபிஎஸ்ஐ மட்டுமே நம்பியே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.
இவர்களில் பலருக்கு சென்னையின் முக்கிய இடங்கள், பிரபலங்களின் வீடுகள் ஏன் கிழக்கு மேற்கு கூட சரியாக தெரிவதில்லை. ஜிபிஎஸ் இருக்கும் அலட்சியத்தால் புதிதாக வந்திருக்கும் நகரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை போல. அதனால் லோக்கல் நாலேஜ் எனும் உள்ளூர் ஞானம் அறவே இல்லாமல் திணறுகிறார்கள்.
இந்தியாவின் முகவரிகள் இன்னமும் முற்றிலும் துல்லியமாக ஜியோ கோட் (Geocoding) செய்யப்படவில்லை. (ஜியோ கோடிங் என்பது நம்முடைய இருப்பிட முகவரியை கணினி புரிந்துகொள்ளும் வகையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளாக (latitude and longitude) மாற்றுவது). அதனால் இப்போது ஒரு முகவரியை மிகச்சரியாக ஜிபிஎஸ்-ல் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அடிப்பது போல் குருட்டு அதிஷ்டம் தான். நம்மூர் முற்றிலுமாக டிஜிட்டாலாகும் போது (It is a transition period) இந்தக் குழப்பங்கள் களையப்படும். அதுவரை நாம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
லேண்ட் மார்க் போன்ற அடையாளங்களை வைத்து போகவேண்டிய இடங்களைக் கண்டுபிடித்து பழக்கப்பட்ட நம்மில் பலருக்கு இதெல்லாம் புது அனுபவம். கூடவே பழைய எண், புதிய எண் குழப்பங்கள் வேறு. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வரும்போது திருவல்லிக்கேணி காசிவிநாயகா மெஸ்-க்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், என்னை யாராவது தெருவில் நிறுத்தி 'காசிவிநாயகா மெஸ் அட்ரசைச் சொல்லு' என சட்டையைப் பிடித்தால் திருதிருவென முழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். சொல்லுங்கள் !? :)
#கஸ்டமர்_கஷ்டங்கள்
குறுகிய சாலைகளில் வகை தொகையின்றி விரையும் வாகனங்கள் ,
கொளுத்தும் வெயிலில் சிக்னல்கள் என நெரிசலான போக்குவரத்தில் ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
அதனால் முன்பெல்லாம் சென்னையை நன்றாக தெரிந்தவர்கள் தான்
டாக்சி, ஆட்டோ டிரைவர்களாக இருந்தார்கள். ஆனால், இப்போது
சென்னையில் ஜிபிஎஸின் கை ஓங்கியிருக்கிறது. பலர்
ஜிபிஎஸ் கையில் இருக்கும் தைரியத்தில் நகரில் பலர் டாக்ஸி டிரைவர்களாகி விட்டார்கள். குறிப்பாக ஓலா டிரைவர்கள். ஓலா வண்டி ஓட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக வேலைக்கு வந்திருக்கும் டிரைவர்கள் ஜிபிஎஸ்ஐ மட்டுமே நம்பியே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.
இவர்களில் பலருக்கு சென்னையின் முக்கிய இடங்கள், பிரபலங்களின் வீடுகள் ஏன் கிழக்கு மேற்கு கூட சரியாக தெரிவதில்லை. ஜிபிஎஸ் இருக்கும் அலட்சியத்தால் புதிதாக வந்திருக்கும் நகரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை போல. அதனால் லோக்கல் நாலேஜ் எனும் உள்ளூர் ஞானம் அறவே இல்லாமல் திணறுகிறார்கள்.
இந்தியாவின் முகவரிகள் இன்னமும் முற்றிலும் துல்லியமாக ஜியோ கோட் (Geocoding) செய்யப்படவில்லை. (ஜியோ கோடிங் என்பது நம்முடைய இருப்பிட முகவரியை கணினி புரிந்துகொள்ளும் வகையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளாக (latitude and longitude) மாற்றுவது). அதனால் இப்போது ஒரு முகவரியை மிகச்சரியாக ஜிபிஎஸ்-ல் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அடிப்பது போல் குருட்டு அதிஷ்டம் தான். நம்மூர் முற்றிலுமாக டிஜிட்டாலாகும் போது (It is a transition period) இந்தக் குழப்பங்கள் களையப்படும். அதுவரை நாம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
லேண்ட் மார்க் போன்ற அடையாளங்களை வைத்து போகவேண்டிய இடங்களைக் கண்டுபிடித்து பழக்கப்பட்ட நம்மில் பலருக்கு இதெல்லாம் புது அனுபவம். கூடவே பழைய எண், புதிய எண் குழப்பங்கள் வேறு. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வரும்போது திருவல்லிக்கேணி காசிவிநாயகா மெஸ்-க்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், என்னை யாராவது தெருவில் நிறுத்தி 'காசிவிநாயகா மெஸ் அட்ரசைச் சொல்லு' என சட்டையைப் பிடித்தால் திருதிருவென முழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். சொல்லுங்கள் !? :)
#கஸ்டமர்_கஷ்டங்கள்











