Sunday, October 9, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(1)

வந்தியத் தேவன் மூலமாக ஓலை முதலில் தஞ்சைக்கு போய்விட்டு பிறகு பழையாறை செல்வது போல ஜெஸி நாவல் கிண்டிலில்  pen2publish-இல் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தச் செய்தி இன்னமும் கிண்டில் அன்லிமிடெட் (kindle unlimited) வாசகர்களுக்கு போய் சேரவில்லை போல. அதற்கு சுமார் 1 வாரம் ஆகும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.  அதன்பின் பலர் வாசித்து கருத்துகளைப் பகிர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இதுவரை வாய்வழிச்செய்தியாக கேள்விப்பட்டவர்கள் மட்டும் வாசித்துக் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிச் சமீபத்தில் வந்த ஒரு அமேசான் கருத்து ...


இப்படி எங்கிருந்தெல்லாமோ வரும் உற்சாகம் நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே !!

Read Jessi

 

கிண்டில் வாங்கித் தர நீ ரெடியா ?

என்னுடைய "ஜெஸி" நாவல் கிண்டிலில் கிடைக்கிறது என்றவுடன் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு மானே, தேனே எனச் சொல்லிவிட்டு, "புத்தகம் வாங்கி படிக்க நான் ரெடி.  கிண்டில் வாங்கித் தர நீ  ரெடியா ?" என்கிறார்.  எப்படி இருக்கிறது கதை, பாருங்கள்.


நம்முடைய அன்பு சொந்தகங்களில் பலருக்கு இந்த விசயம்  முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக - கிண்டில் நூல்களை வாசிக்க தனியான சாதனம் எதுவும் தேவையில்லை. கிண்டிலின் செயலியை (app) போஃன், டேப்லெட்-களிலும் தரவிறக்கம் செய்து அதில் எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இல்லையென்றால், எந்தவித சாதனமும் இல்லாமல் கணினி  பிரொளசரிலும் கூட நேரடியாக எளிதாக  படிக்கலாம்.

நேரடியாக பிரொளசரில் படிக்க உதவும் கீழே இணைப்பில் தருகிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://read.amazon.com/kindle-library

Read Jessi

Thursday, October 6, 2022

பின்னட்டைக் குறிப்பு - போட்டி

புத்தகங்களுக்கு  'பளிச்'சென பின்னட்டைக் குறிப்பு இருப்பது அவசியம். அது வாசகர்களைக் கவரும் ஒரு மார்கெட்டிங் யுத்தி என்பதைத் தாண்டி சுமார் நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படைப்பை வாசித்து அதற்கு அழகான சுருக்கம் அல்லது 'blurb' எழுதுவது என்பது ஒரு கலை.  

அந்தக் கலையை ஊக்குவிக்குவிக்கும் வகையிலும் எனது ஜெஸி நாவலைப் பரந்த வாசகர் பரப்புக்கு எடுத்து செல்லும் முயற்சியாகவும் ஒரு சின்ன போட்டி.

அமேசானில் கிடைக்கும் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' நாவலை கிண்டலில் வாசித்து 60 சொற்களில் இருந்து 120 சொற்களுக்கு மிகாமல் சிறப்பாக blurb எழுதி அனுப்பும் அன்பர்களுக்கு பரிசு கொடுப்போம். முதல் பரிசு ரூ.1000 மற்றும் 10 பேருக்கு ரூ.150 (தொகை அமேசான் வவுச்சராக) தரலாம்.


விதிமுறை- போட்டியில் கலந்து கொள்பவர்கள் கிண்டிலில் புத்தகத்தை வாசித்து அங்கு  தங்கள் கருத்துகளைப் (ரேட்டிங்ஸ் & ரிவியூ) பகிர்ந்திருக்க வேண்டும். அதை உறுதி செய்த பின் சுருக்கத்தை aarurbass AT gmail.com க்கு அனுப்ப வேண்டும். போட்டிக்கான கடைசி நாள்- அக்டோபர் 10 (இந்திய நேரம்). 

இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது. ‘அட்டை’காசமாக எழுத வாழ்த்துகள் !

போட்டி நடுவர்களின் முடிவே இறுதியானது. புத்தகத்தை வாசிக்க அமேசான் தள முகவரியை கீழே தருகிறேன்.  இதை மற்றவர்களிடமும் பகிருங்கள்,

Read In Amazon

Monday, October 3, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங்

நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.  எனது "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நாவல் (புதினம்) அமேசான் கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. 

இதன் மூலமாக ஐந்தாவது ஆண்டாக அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish) போட்டியில் என்னுடைய நான்காவது புனைவு கலந்து கொள்கிறது.


இந்த அறிவிப்பு வந்தவுடன் என்னைப் பங்கேற்க ஊக்குவித்து உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி !!

இனி இதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியது நண்பர்களின் கைகளில் இருக்கிறது. ஆமாம், இங்கே கீழே புத்தகத்துக்கான இணைப்பைத் தருகிறேன். வாசித்து தங்களுடைய கருத்துகளை (ரேட்டிங்ஸ் அண்ட் ரிவியூஸ்) மறக்காமல் பதிவிடுங்கள்.

Read In Amazon

இந்தப் படைப்பு Pen to publish-ல் இணைத்துள்ளதால் இது மிக முக்கியம்.

Friday, September 23, 2022

சமூக ஊடகங்கள் குறித்த "நில்-கவனி-செல்"

சமூக ஊடகங்கள் குறித்த "நில்-கவனி-செல்" என்ற கட்டுரைத் தொடரை மக்கள் உரிமை இதழில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அச்சு ஊடகத்தில் இப்படி ஒரு தொடர் எழுதுவது இதுவே முதல் முறை. வாழ்த்தி, ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

Monday, September 12, 2022

வனநாயகன் குறித்து-23 (மலேசியா பற்றி அறியும் வாய்ப்பு)

கனடா வாழ் நண்பர் பாமா இதயகுமார் அவர்கள் அனுப்பிய செய்தி. நன்றி பாமா ..

 //

வணக்கம்,...

உங்கள் நான்கு புத்தங்களும் நிச்சயமாக பயனுள்ள சாரத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தன. கூடுதலாக, மலேசியா பற்றி அறிய கூடிய வாய்ப்பு (கதையின் மூலம் விமான செலவு இல்லாமல் அழைத்து சென்று விடும் வல்லமை).

அதேவேளை social media பற்றிய தகவல் , மிக அருமையான புத்தகங்கள். வாழ்த்துக்கள் !!!

//



Sunday, September 11, 2022

அறத்துக்கு அப்பால் - நாகேஸ்வரி அண்ணாமலை

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் குறித்து அமெரிக்க எழுத்தாளர் நாகேஸ்வரி அண்ணாமலை ... 

//

திரு ஆரூர் பாஸ்கர்,

வணக்கம்.  தங்கள்  'அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்' நூலை இப்போதுதான் படிக்க முடிந்தது.  எளிமையான தமிழில் நீங்கள் கூற விரும்புவதை சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்.  சமூகத்திற்குத் தேவையான புத்தகம்.  எல்லோரும் படித்துப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது என்னையே பேஸ் புக்கில் ஒருவர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ...

//

என சமூக ஊடகங்கள் குறித்த தன்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவத்தையும் இணைந்து பகிர்ந்த அவருக்கு எனது நன்றி !!

நூல் வாங்க இணைப்பு - To buy